பழக் கதைகள் 8

டிசம்பர் 14, 2008

ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த மாதுளம் பழங்களை ஒரு கூடையில் இட்டு தன் வீட்டு வாசலில் வைத்தான்.
அதன் அருகில் ஒரு அட்டையில் இப்படி எழுதி வைத்தான்.
“இந்தப் பழங்கள் இலவசம். ஆளுக்கு ஒன்று என எடுத்துக் கொள்ளலாம்.”
அந்தப் பழங்கள் அப்படியே மாலைவரை இருந்தன. யாரும் அவற்றைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

மறுநாள், அவன் அந்த அட்டையில், இப்படி எழுதி வைத்தான்.
“இந்தப் பழங்களுக்கு ஒரு விலையுண்டு. விலை கொடுத்தால் தான் தெரியும் இப்பழத்தின் அருமை.”
அவன் எழுதி வைத்துவிட்டு உள்ளே செல்லும்போதே சாலையில் சென்ற மக்களால் அவன் அழைக்கப்பட்டான்.
பலர் கூடி வந்து அப்பழங்களைப் பற்றி விசாரித்து விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

-கலீல் கிப்ரன் கதையிலிருந்து


எஸ்.எம்.எஸ் ஜோக்கு

ஏப்ரல் 14, 2008

எனக்கு வரும் கைபேசி குறுஞ்செய்திகளில் நகைச்சுவை என்ற பெயரில் வரும் சில செய்திகள் சிலசமயம் புன்னகையை வரவழைப்பவை.

உதாரணம் 1
நண்பன்1: உங்க மனைவிக்கும் உங்க அம்மாவுக்கும் சண்டை வந்தா நீங்க யார் பக்கம் நிப்பீங்க ?
நண்பன்2: எங்க வீட்டு பீரோக்கு பின்னாடி நிப்பேன்

உதாரணம் 2
நிருபர்: நீங்க சோப் போட்டு குளிப்பீங்களா? அல்லது ஷாம்பூ போட்டு குளிப்பீங்களா ?
நடிகை: நான் கதவை தாப்பா போட்டுக் குளிப்பேன்

கவிதை போல வந்த குட் நைட் செய்தி ஒன்று.

அப்படி என்ன ஜோக் சொல்லிவிட்டது காற்று ?
இப்படி குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறது மரம் ?
யோசித்தவாறு உறங்குங்கள்


Hello world!

மே 3, 2007

Welcome to ஈ – வேகம். This is my first post. Please leave your comments if my blog brovoked anything inside you!