ஓஷோவின் தியானநிலைத் தருணங்கள்

ஏப்ரல் 13, 2009


கோதும்பி நடனம்

ஏப்ரல் 7, 2009

இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை தொகுப்பில் வரும் ‘பூவேறு கோனும்’ திருவாசக பாடலின் இசை வடிவம் பலமுறை நான் கேட்டு ரசித்த ஒன்று. ஆனால், அதன் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என நான் யோசித்தது உண்டு. அதற்கு விடையாக ஒரு நடனக் காட்சியை கண்டு மகிழ்ந்து போனேன். அதன் இணைப்பு இங்கே



இரண்டு வார்த்தைகள்

ஏப்ரல் 7, 2009

குரு மட்டும் சீடர்களுடன் பேச அனுமதி உண்டு.
சீடர்கள் பேச அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி. அதுவும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேச அனுமதி கிடைக்கும்

முதல் ஆண்டில் ஒரு சீடன் பேசினான், ” படுக்கை கடினம் “

இரண்டாம் ஆண்டில் அவனே பேசினான், ” சாப்பாடு நாற்றம் “

மூன்றாம் ஆண்டு மறுபடியும் அவனே பேசினான், ” நான் வெளியேறுகிறேன் “

குரு அவனை நோக்கி புன்னகைத்தார்.


அழகு குட்டி செல்லம்

ஏப்ரல் 1, 2009

உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேச தெரியலே
எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு ?


தத்துவங்களைப் பேசுவது

மார்ச் 24, 2009

சரியான செயலை ஒவ்வொரு முறையும் நம்மால் செய்ய முடிகிறதா ?

இந்தக் கேள்வியில் இரு சொற்கள் “பொது” வானவை.

1. சரியான செயல், 2. செய்வது.

இந்த இரு சொற்களையும் அதன் பொருளையும் விளங்கிக் கொள்ள ஒரு காட்சித் தொகுப்பு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

 .

இந்தத் தொகுப்பினை வடிவமைத்தவருக்கு என் நன்றி.


இயற்கையும் விஞ்ஞானமும்

மார்ச் 4, 2009
இயற்கையும் விஞ்ஞானமும்

இயற்கையும் விஞ்ஞானமும்


வழிகாட்டி

பெப்ரவரி 8, 2009
வழிகாட்டி

வழிகாட்டி

 

படி

அதை நம்பு

இல்லையேல்

அழிந்து போ


மரம்

ஜனவரி 31, 2009
மரம்

மரம்

 

மீஞ்சூருக்குப் போகும் பாதையில் நான் எடுத்த படம்.

கடவுள் மரம் படைக்கத் தெரிந்தவன்

மனிதன் கவிதை படைக்கத் தெரிந்தவன்

(எப்போதோ படித்த ஒரு ஆங்கிலக் கவிதை நினைவுக்கு வருகிறது )


வாழ்க்கை

டிசம்பர் 30, 2008

காய்ந்த ஒரு சிறு வரட்டி (பசுமாட்டின் சாணித் துண்டு) இல் முளைத்த

ஒரு செடி

வாழ்க்கை

வாழ்க்கை


எதில் ?

அக்டோபர் 27, 2008

சுவை அறிவால் மீன் தூண்டிலில் சிக்குகிறது
தீயைக் கண்டு அதில் வீழ்ந்து விட்டில் பூச்சி இறக்கிறது.
ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடிகிறது
ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது
மணத்தை நாடி வந்து வண்டு மலரில் அகப்படுகிறது.

இந்த எல்லாப் புலன்களுக்குள்ளான மனித உயிர் எதில்

சிக்குகிறது ?


ஆசிரியர் தினம்

செப்டம்பர் 4, 2008

இந்தப் படம் உங்கள் கணிணியின் தோற்றப் பொலிவை மாற்றிவிடும்.

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

சத் சித் ஆனந்தம்

சத் சித் ஆனந்தம்


உறையில் உள்ள மரக் கத்தி

நவம்பர் 18, 2007

அன்புடன் என் வலைப்பதிவிற்கு வாருங்கள்.
நான் மிகவும் களைத்து விட்டேன்.
அதிகமாக எழுதியதால் அல்ல.
நான் மேலும் என்ன எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தக் களைப்பு.
முக்கியமான கண்டுபிடிப்புகளைக் கூற சில வார்த்தைகளே போதும்.
அதிகமாகச் சொல்லிக்கொண்டே போனால் என்ன பயன் இருக்கும் ?

மாசற்ற சில சொற்களால் சொல்லத் தெரியாதவரே
உண்மையில் பல சொற்களால் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.

எனக்குச் சுய திருப்தி என்ற உணர்வு இன்னும் வரவில்லை.
இரவில் உலாவும்போது, சிறந்த இசையைக் கேட்கும் போது,எனக்குத் தேவைப்படும் பொருட்கள் எல்லாம் எனக்குக் கிடைத்துவிடும் போது இந்த மாதிரியான எண்ணங்கள் என்னில் எழுகும்போது, அந்த எண்ணங்களை என்னெவென்று அழைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் கண்ட சாகசங்கள், என் நினைவில் ஊறித் திளைத்தவைகளை என்னால்
உங்களிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்வதை இனிமேலும் தள்ளிப்போட முடியாது.

என்னிடம் எந்த உயர்வு, தாழ்வுமனப்பான்மை, பயம் என்பது கிடையாது.
“நான் எழுதுவதில் மிகவும் களைத்து விட்டேன்” இதுபோன்ற எழுத்துக்கள் நன்றாக வேலை செய்கின்றன.
இவை பழைய முறைகளாக உங்களுக்குத் தோணலாம்.
உங்களுக்கு யாருமே தாந்திராத ஒரு மர்ம மகிழ்ச்சி ஒன்று என்னால் தர முடியும்.
அது தனித்தன்மை வாய்ந்த ஒன்று.
நான் ஒருவகை எழுத்துக் கலையை வளர்த்துக் கொண்டேன்.நன்கு பயிற்றுவித்துக் கொண்டேன். அதன் மூலமாக.

யாருக்கும் எந்த மன்னிப்பும் கிடையாது என்பது என் கொள்கை.
நல்லெண்ணம், பொறுப்பற்ற தன்மை, கஷ்டமான சூழ்நிலைகளை நான் ஒப்புக்கொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை குற்றங்கள் விடுவிப்பதும் இல்லை, ஆசீர்வதிப்பதும் இல்லை. செயலால் செயல் எல்லாம் சேர்த்து மொத்தமாகப் பெரிய வடிவம் எடுக்கிறது.

நான் உலகில் மற்றவர்கள் போல வாழ்வது நல்லது என்று கற்றிருக்கிறேன்.
அதற்கு மற்றவர்கள் என்னைப் போல வாழ்வது நல்லது என ஏன் கற்கவில்லை ?

நாம் எல்லோரும் ஏன் ஒரே மாதிரி இல்லை ?
தொடர்ந்து ஒரே கேள்விக்கு விடை தெரிந்தாலும்,
அதே விஷயத்தைப் பல கோணங்களில் விவாதிக்கிறோம்.
ஏன் ?
தயவு செய்து சொல்ல முடியுமா ?

உண்மையைச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்.
“அடிமைத்தனமின்றி எந்த தீர்வும் கிடையாது”

முன்பொரு காலத்தில் நான் சுதந்திரம் பற்றி மிக அதிகமாகப் பேசியவன்.
நாள் முழுவதும் பேசுவேன்.
நான் சொல்வதை எதிர்ப்போரை சுதந்திரம் என்ற வாள் வீசி பயமுறுத்துவேன்.
எனது இந்த வகைப் பேச்சால் என் ஆசைகளையும், அதிகாரத்தையும் பெருக்கியுள்ளேன்.
நான் செய்ததை நியாயப்படுத்த அதிகமாகப் பாடுபட்டுள்ளேன்.
இதற்கு விலையாக நான் பெற்றது, அன்பாகப் பேசும் நண்பர்கள் கிடையாது.
தனிமையில், தடுக்கப்பட்ட அறையில் தனியாக !
சுதந்திரம் ஒரு தாங்க முடியாத பளுவாக மாறிவிட்டது.
எனது ஒவ்வொரு அளவுக்கு மீறிய செயலும் எனது பலத்தைக் குறைத்துவிட்டது.
இது ஒரு நீண்ட துக்கம்.
இந்த துக்கத்தைப் போக்க ஒரே வழி உண்டு.

எஜமானர் இல்லாத ஒருவரின் நாட்கள் மிகக் கொடுமையானவை.
ஆகவே ஒருவர் ஒரு எஜமானரைக் கட்டாயமாக்த் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இது ஒரு வெட்கக்கேடு இல்லையா?
இந்த வெட்கம் என்னைத் தாக்குகிறது.
இதை ஒரு கெளரவத்தோடு செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்மையில் என்னை மேலும் தாக்குகிறது.

என்னிடம் இருப்பது நல்ல மனம் நிறைந்த சிரிப்பு, காந்தம் போலக் கவரும் ஒரு கைக்குலுக்கல்.
மனித வழி என்பது இது தான். இரு முகம் கொண்டவன், தன்னை நேசிக்காமல் அடுத்தவர்களை நேசிக்க முடியாது.

சுருக்கமாகச் சொல்லப்போனால் நான் மகிழ்ச்சியாக வாழத் தேவையான மிக முக்கியமான ஒன்று
மற்றவர்கள் வாழாமல் இருப்பதைத் தேர்ந்தெடுப்பது.

தவறு செய்திருந்தாலும் தண்டிக்கபட முடியாததாக அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை !

ஏனோ இப்பாடல் நினைவில் சிறகடித்துப் பறக்கிறது.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார் ?
மாபெரும் வீரர் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.


உருளைக்கிழங்கு நடனம்

நவம்பர் 7, 2007

நியூசிலாந்து நாட்டில் மாவோரிகள் என்ற ஒரு இனம் உண்டு. இவர்கள் மலைப்பகுதியில் உருளைக்கிழங்கு பயிர் செய்பவர்கள். அங்கே மிகுந்த மழையால் உருளைக்கிழங்கு பயிர் சேதமடைவதுண்டு.  எனவே, இந்த இனப் பெண்கள் பயிர் வளரும் காலத்திலே, மழையும், காற்றும் வேகமாக வீசுவதுபோலவும், உருளைக்கிழங்கு பயிர் அதனை எதிர்த்து செழித்து வளர்வது போலவும் ஒரு பாவனையான நடனம் நிகழ்த்துவர்.

இந்த பாவனையும், மனதில் நினைத்த நிகழ்ச்சி நடைபெற வேண்டும் என்ற வேண்டுகோளும் தான் ஆதிகால மந்திரம்.

இந்தச் செயலில் நடனம் என்ற பொழுதுபோக்கும், பேசாத வேண்டுதல் என்ற ஒரு பிரார்த்தனையும் உண்டு.

மேலும், இச்செயல் ஒரு ஆதிகால மெசேஜ் உள்ள சினிமா !


மீன் வாழ்க்கை

செப்டம்பர் 2, 2007

ஜப்பானியர்களுக்கு மீனை அப்படியே உயிருடன் இருக்கும் தன்மையுடன் (fresh) சாப்பிடப் பிடிக்கும். ஜப்பானில் கடற்கைரையோரம் மீன்கள் பிடிக்கக் கிடைக்காது. அதற்காக, அவர்கள் நீண்ட தூரம் கடலுக்குள் சென்று
மீன்களைப் பிடித்து, பின் கரைக்குத் திரும்புவது இயல்பானது (திரும்ப வரும் நேரம் அதிகம்). அப்படி அவர்கள் திரும்ப வரும்போது மீன்கள் இறந்து விறைத்து விடுகின்றன. இதனால், அதன் சுவை உண்ணும்போது மாறுபடுவதை ஜப்பானியகள் விரும்பவில்லை.

மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இதற்காகச் சில முயற்சிகள் மேற்கொண்டார்கள்.

1. கடலுக்குள் பிடித்த மீன்களை ஐஸ் பெட்டிகளில் வைத்துக் கொண்டு வருவது – அப்படியும் சுவை ஏற்புடையதாக இல்லை.

2. மீன்பிடி படகுக்குள் ஒரு நீர்த்தொட்டி அமைத்து அதில் பிடித்த மீன்களைக் கரைக்குவரும்வரை உலவவிடுவது. இந்தச் செயற்கையான அமைப்பில் மீன்கள் அலைந்து திரிவது இயற்கையாக இல்லாமல் போனது. அதனால், அவற்றின் சுவை உண்ணும்போது மாறுபட்டது – இதுவும் வாடிக்கையாளர்களுக்குத் திருப்தி தரவில்லை.

3. நீண்ட நாள் யோசனைக்குபின் ஜப்பானிய மீனவர்கள் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டார்கள்.

அது மீன்பிடி படகில் ஒரு நீர்த்தொட்டி, அதில் பிடிபட்ட மீன்களைக் கரைக்குத் திரும்பும்வரை உலாவ விடுவது – ஒரு சுரா மீன் அத்தொட்டியில் அச்சிறு மீன்களை சாப்பிட இருக்கும். அச்சுரா மீனால் சில மீன்களையே
கரைக்குவரும்வரை உண்ண முடியும். மற்ற மீன்கள் சுராவின் துரத்தலுக்குத் தப்பிக்க அங்கும் இங்கும் ஓடியபடி இருக்கும்.

கரைக்கு வந்தபின் மிச்சம் இருக்கும் மீன்களைப் பிடித்துச் சாப்பிடும்போது அவற்றின் சுவை உயிர்த்தன்மையுடன் (fresh) இருந்தது.

வாடிக்கையாளருக்கும் திருப்தி.

இந்தச் செய்தியைப் படித்த எனக்கு ஏதோ ஒரு கருத்து மனிதர்களுக்கும் இதில் இருப்பதாக உள்ளுணர்வு சொல்கிறது.


வாழ்வு

ஆகஸ்ட் 12, 2007

மனித மனம் தோல்விகளையும், அவமானங்களையும் பதிய வைக்கும் அளவிற்கு வெற்றியையும், சந்தோஷத்தையும் பதிய வைத்துக்கொள்வதில்லை என்று பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் சொல்வது எனக்கு ஏற்புடையது.

ஆனால், ஆனந்தமாய் வாழ முழுமனதுடன் முடிவெடுப்பது என்பது ஒவ்வொருவரின் கையில் தான் உள்ளது என்பதில் நான் முரண்பட்டுப் போகிறேன். இதற்கான விளக்கம் பின் வரும் ஒரு கதையில் நான் உணர்ந்தேன்.

வெளிச்சமற்ற இடத்தை இயல்பாக இருள் சூழ்ந்துகொள்வது போல மகிழ்ச்சியற்ற மனம் என்றாலே கவலை என்பது அங்கே புகுந்துவிடுவது ஒரு இயல்பு.

வாழ்வின் ரகசியங்களைக் கற்றுக்கொள்ள கற்றுக்கொள்வதற்கு முதலில் எங்கு பாடத்தைத் துவங்குவது ?

மனம் போல எண்ணம் -
எண்ணம் போல வாழ்வு -
வாழ்வு போல வெற்றி -
வெற்றி போல உடல் நலம் -
உடல் நலம் போல மனம்

என்னும் சுழற்சியில் வாழ்வை மனதில் துவங்கி மனதில் முடியும் என்று எண்ணாமல் எங்கு வேண்டுமானாலும் துவங்கலாம் என்பது என் எண்ணம். இதில் மகிழ்ச்சிக்கு இடம் எங்கு உள்ளது ?

மகிழ்ச்சியைப் பழகுவது எப்படி என்ற கேள்விக்கு விடை ஒரு குறுகிய வட்டத்தில் வாழும் ஒரு வாழ்வில் இல்லை என்று சொல்லலாம்.

‘நான்’, ‘எனது’ என்ற குறுகிய வட்டத்தில் வாழும் ஒரு வாழ்வில் மகிழ்ச்சி என்பதைக் கற்பனை செய்து பார்ப்பது கூட கடினமான ஒன்று.

கள்ளம் கபடம் இல்லாமல் நம்மை முழுமையாக நம்பிப் பழகும் பிறருக்கு நாம் அளிக்கும் ஒரு கைமாறு தான் மகிழ்ச்சி.

நம் வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு சம்பவமும் ஏன் ஒவ்வொரு நிமிடமும் நம் மன மகிழ்ச்சியை தீர்மானிக்கும் சக்தி படைத்தவை.

பொருளியல் என்பது வாழ்க்கை வாழ என்னென்ன விருப்பத்தேர்வு உண்டு என்பதைச் சொல்லும் ஆனால் சமூகவியல் என்பது வாழ்க்கை வாழ விருப்பத்தேர்வற்ற நிலையை விளக்கி எப்படி வேறு வழியில்லாத நிலையில் ஒரு வாழ்வு வாழ வேண்டியிருக்கிறது என்பதைச் சொல்லும் என்று ஒரு சொலவடை உண்டு.

அந்த வகையில் சமீபத்தில் நான் படித்த ஒரு பெண்ணின் வாழ்க்கை கதை கதிகலக்க வைக்கும்படி இருந்தது.

தம் அந்தஸ்துக்கு ஏற்ப ஒரு குடும்பத்தில் மணம் முடிக்க பெற்றோர் நினைத்த காலத்தில் அப்பெண்ணும், அவளின் காதலனும் ஊரைவிட்டு ஓடி வேறு இடத்திற்குச் சென்று மணம் புரிந்து கணவன் மனைவியாக வாழத் துவங்கினர்.

சில காலத்திற்குப்பின் அப்பெண் கர்ப்பவதியானாள். முதல் குழந்தை பிறக்க இருக்கும் சமயத்தில் தாய் வீட்டில் இருக்க விருப்பமாக உள்ளது என்று தன் ஆசையைக் கணவனிடம் தெரிவித்தாள். ஆனால் கணவன் ஒப்புக்கொள்ளவில்லை.

மீண்டும் இரண்டாம் முறை கர்ப்பவதியானபோது அப்பெண் பிறந்தவீடு செல்ல பெரிதும் விரும்பினாள். முன்போலவே கணவன் மறுக்க அவள் மிகுந்த பிடிவாதத்துடன், தன் தாய் வீட்டிற்குச் சென்றே ஆக வேண்டும் என்று அடம்பிடிக்க கணவன் அதற்குச் சம்மதித்தான்.

இருவரும், முதல் குழந்தையுடன் புறப்பட்டுச் செல்லத்துவங்கினர். அப்பெண் தாய் வீட்டுக்குப் போகும் முன்பே வழியிலேயே குழந்தை பிறந்துவிட்டது. அந்த நிலையில் கணவன் புதிதாகப் பிறந்த குழந்தைக்கும் தாய் (தன் மனைவி)க்கும், ஒரு குடிசை அமைக்க எண்ணி செடி கொடிகளைச் சேகரிப்பதற்காகப் பக்கத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்குச் சென்றான். அங்கே அவனை ஒரு பாம்பு கடித்துவிட அவன் அங்கேயே இறந்துபோனான்.

பிரசவம் ஆகியிருந்த அப்பெண் கணவனைக் காணாது மனம் குழம்பி, நடக்கக்கூட சக்தியில்லாத நிலமையில் தானே சென்று தேட முடிவு செய்தாள். காட்டிற்குள் சென்று தேடினாள். மூத்த குழந்தையைக் கையில் பிடித்தபடியும், அப்போதுதான் பிறந்த குழந்தையைக் கையில் அணைத்தபடியும் சென்ற அவள், தம் கணவன் பாம்பு கடித்து வாயில் நுரைகக்கி இறந்த கோலத்தைக் கண்டு கலங்கித் துடித்தாள்.

பிறகு, மனம் நொந்தபடி, குழந்தைகள் சகிதம் தம் பெற்றோர் வீட்டுக்கு நடந்து செல்லத் துவங்கினாள்.வழியிலே ஒரு ஆறு அப்போது குறுக்கிட்டது. இரண்டு குழந்தைகளுடன் அவளால் ஆற்றைக் கடக்க முடியாது என்பது உணர்ந்து, மூத்தக் குழந்தையை கரையிலேயே நிற்கச் சொல்லிவிட்டு, பிறந்த சிசுவுடன் மறுகரையை அவள் அடைந்தாள்.
அங்கே சில கொடி தழைகளை வைத்துச் சிசுவை மறைவாகக் கிடத்தினாள். பிறகு மூத்தக் குழந்தையை அழைத்துவர, மீண்டும் ஆற்றைக் கடந்து செல்லத் துவங்கினாள்.

பாதி வழியில் ஒரு பருந்து, மறுகரையில் மறைவாக வைக்கப்பட்டச் சிசுவை நோக்கி வேகமாக வருவதைக் கண்டு மனம் பதைத்து, அப்பருந்தை விரட்ட இரண்டு கைகளையும் தூக்கி வீசியபடியே, அலைபாய்ந்தாள். அவள் செய்கையைக் கண்ட மூத்தக் குழந்தை தன் தாய் தன்னை வரும்படி அழைப்பதாகப் புரிந்துகொண்டு ஆற்றில் இறங்கிவிட்டது.

அப்பெண் இப்போது எந்தக் குழந்தையையும் காப்பாற்றும் நிலையில் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. ஆற்றில் வெள்ளம் திடீரென மிகுந்து மூத்தக் குழந்தையை அடித்துச் சென்றுவிட்டது. பருந்து சிசுவை எடுத்துச் சென்றுவிட்டது. இரண்டு காட்சிகளும் அவள் கண் முன்னே ஒரே சமயத்தில் நிகழ்ந்தது.

மனம் உடைந்து வேறு கதியில்லாத நிலையில், அவள் தன் பெற்றோர் வீட்டை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

அவள் தம் பெற்றோர் வீட்டை அடைந்தபோது, முதல்நாள் பெய்த மழையில் அவ்வீடு இடிந்து விழுந்துவிட்டதாகவும், அந்த இடிபாட்டில் அவள் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் மரணமடைந்துவிட்டதாகவும் அக்கம் பக்கத்தில் அவளிடம்சொன்னார்கள்.

அப்பெண் அலறி அழுதாள்.புலம்பினாள். சிரித்தாள். என்று முடிவடையும்.

இக்கதை கொடும் துன்பங்கள், கடும் வினைகள் என்றால் என்ன ? என்பதை அழகாக விளக்குகிறது.

கல்லாய் இறுகிப்போன மனம் அழகுச் சிலையாக மாறும் ரகசியம் எங்கு உள்ளது ?


எண்ணங்களாகிய காடு

மே 25, 2007

சில எண்ணங்கள் வலிமையுடையவையாகத் தோன்றுவது ஏன் ? அவைகளுக்கு உள்ள வலிமையினாலா ? அல்லது நான் அவற்றைத் தொடர்ந்து நினைப்பதால், கவனிப்பதால் அவை வலிமை பெறுகின்றனவா ?

எண்ணங்களின் பிடியிலிருந்து மனதை நீக்கி ஒரு நிலையில் வைக்க இக்கேள்வியால் ஏதேனும் பயன் உண்டா?

சிதறிப்போன வலிமையற்ற மனதில் தொடங்கி, ஒன்றோடு தொடர்பு கொள்ளுதல் என வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் முடிவுறாத் தேவையாகத் தொடர்வது ஓர் அறுபடாத தொடர் உறவு.


மானம்

மே 19, 2007

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் கோச்செங்கணான் என்ற சோழ மன்னனிடம் போரில் சிறைப்பட்டு குடவாயில் என்னும் ஊரில் சிறை வைக்கப்பட்டான். சிறையில் அவனுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் கேட்டான். காவலன் சற்றே காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான்.

கொண்டு வந்து தந்த தண்ணீரைக் குடிக்காமல் உயிர்விட்டான் அந்த மன்னன்.
மனம் பொறுக்காத மன்னன் இறக்கும்போது ஒரு பாடல் எழுதிவைத்துவிட்டு மாண்டான்.

அவன் எழுதிய பாடல்

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்”

பொருள்:
குழந்தை இறந்து பிறந்தாலும், உருவம் இல்லாமல் சதைப் பிண்டமாக பிறந்தாலும் வாளால் கீறியே அதைப் புதைப்பார்கள். நான் போரில் சாகாமல், சிறையில் இருப்பதால் சிறைக்காவலன் கூட என்னை மதிக்கவில்லை என்பது சொல்லாத பொருள்.


மறதி

மே 19, 2007

மறதியால் இன்று அலைச்சல் ஏற்பட்டது.
என் மறதிக்கு எனக்குத் தெரிந்த காரணங்கள்.

1. அலட்சியம்
2. வேலைச் சுமை
3. கவலை
4. திட்டமிடாமை.

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் ஒன்று வெளியூர் பயணம் செய்வோர் மனப்பாடம் செய்து கொண்டு பயனடைவதாக உள்ளது.

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்பு பாட்டரி விளக்குத் தூக்கு கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செறுப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டப் பெட்டி ரூபாய் கைகொள்க யாத்திரைக்கே

இன்று பயணம் செய்வோர் எடுத்துச் செல்லும் பொருள் இதில் எவ்வளவு என்பது பாத்தால் அவை மிகவும் குறைவாக, பலது இல்லாமல், வேறு பொருள்கள் அந்த இடத்தில் இடம் மாறியுள்ளது எனக்கு வியப்பு.

இன்று பயணம் செய்வோர் பயணிக்க ஈ-டிக்கெட் மற்றும் அதன் அத்தாட்சி, செல்போன் சார்ஜர், க்ரெடிட்/டெபிட் கார்டு என்று பல புதியதாக இன்று இடம் பெற்றுவிட்டன.

பாட்டரி விளக்கு, தூக்கு கூஜா, தாள் பென்சில் தீப்பெட்டி கோவணம் (?!) முதலியவை பயணத்துக்குத் தேவையா என்ன ?


பிறர்க்கு உதவுவது

மே 19, 2007

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான துன்பம்.
மகனை இழந்த பெரும் சோகம்.
பணத்தை இழந்த பெரும் துன்பம்.
மனைவியை இழந்து விட்ட துன்பம்.
கணவனை இழந்த துயரம்.
தாய் தந்தையை இழந்த அனாதையின் உள்ளம்.
பெரிய விபத்தில் எல்லோரையும் இழந்த பெண் ஒருவளின் துயரம்.

இன்னும் பல வாழ்க்கையில் இருந்தாலும் வாழ்க்கையை வாழ வேண்டிய யதார்த்தம்.
என்ன செய்வது? எப்படி வாழ்வது என்று சிந்திக்கும் போது துன்பப்பட்டவரின் உள்ளத்தில் தோன்றும் ஒளிக்கீற்று தான் “பிறர்க்கு உதவுவது”.

அதுவரை இந்த சொற்றொடரின் பொருள் யாருக்கும் விளங்காது.

வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றும் சக்தி இந்த செயலுக்கு மட்டுமே உண்டு.


வினா விடை

மே 19, 2007

வினாவும் விடையும்.

கே.பி.சுந்தராம்பாளின் கணவர் எஸ்.ஜி.கிட்டப்பா (நடிகர் மற்றும் பாடகர்) ஒரு முறை நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய நிலை. எதிர் வக்கீல் கிட்டப்பாவிடம் குறுக்கு விசாரணையில் கேட்ட கேள்விகளும், கிட்டப்பாவின் பதிலும்.

“நீங்க என்ன தொழில் செய்கிறீர்கள்?”

“நாடகங்களில் நடித்து வருகிறேன்”

“கூத்தாடும் கேவலமான பிழைப்பா?”

“ஆமாம். ஆனா எங்க அப்பா செஞ்ச தொழிலுக்கு இது தேவலை.”

அவர் என்ன செஞ்சார்?”

:வேணாம், அதச் சொல்ல முடியாது. அது கேவலத்திலும் கேவலமான தொழில்.

பரவாயில்ல. அது என்னனு சொல்லுங்க.

வக்கீல் தொழில் செஞ்சாரு.

***
பழைய மாணவர் ஒருவர் தம் ஆசிரியரைச் சந்தித்தார்.

மாணவர், ‘ஐயா, நான் உங்ககிட்டப் படிச்சிருக்கேன், எனக்குத் தமிழ் வாத்தியார் நீங்க தான்” என்றார்.

ஆசிரியர், ”ழ வராம அடிக்கடி என் கிட்ட உதை வாங்குவியே, அந்தப் பையன் தான் நீ?”

மாணவர், ‘ஆமாம், இப்ப நல்லா ழ வருது. நீங்க முந்தியெல்லாம் பசங்களக் கூப்பிட்டு வீட்டு வேலையெல்லாம் வாங்குவீங்களே, இப்பவும் அப்படித்தானா?”

*****=
அம்மா, படித்துக் கொண்டிருக்கும் மகனிடம் “டேய், கடைக்குபோய் வெண்டைக்காய், தக்காளி வாங்கிட்டுவாடா சமையலுக்கு”
அப்பா, ” என்ன ஐயேயெஸ்ஸுக்கா படிக்கிற? போய் வாங்கிட்டு வந்து படியேண்டா?”
மகன், ” நீங்க என்ன பேப்பர் படிச்சுட்டு சட்டசபையில போய் பதில் சொல்லவா போறிங்க?”