பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் சுவாதி் திருநாள் மகாராஜாவின் இந்தப் பாடலைக் கேட்டதுண்டா ? 87-88 -ல் எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையமைப்பில் வெளிவந்து தேசீய விருது பெற்ற திரைப்படத்திலும் (சுவாதி் திருநாள்)இப்பாடல் உண்டு.
பாலமுரளிகிருஷ்ணாவின் குரலில் சுவாதி் திருநாள் மகாராஜாவின் இந்தப் பாடலைக் கேட்டதுண்டா ? 87-88 -ல் எம்.பி.ஸ்ரீநிவாசன் இசையமைப்பில் வெளிவந்து தேசீய விருது பெற்ற திரைப்படத்திலும் (சுவாதி் திருநாள்)இப்பாடல் உண்டு.
இளையராஜாவின் ‘திருவாசகம்’ இசை தொகுப்பில் வரும் ‘பூவேறு கோனும்’ திருவாசக பாடலின் இசை வடிவம் பலமுறை நான் கேட்டு ரசித்த ஒன்று. ஆனால், அதன் காட்சியமைப்பு எப்படி இருக்கும் என நான் யோசித்தது உண்டு. அதற்கு விடையாக ஒரு நடனக் காட்சியை கண்டு மகிழ்ந்து போனேன். அதன் இணைப்பு இங்கே
உனக்குத் தெரிந்த மொழியிலே எனக்குப் பேச தெரியலே
எனக்குத் தெரிந்த பாஷை பேச உனக்குத் தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு ?
பித்தோவன் இசைமேதையின் ஒரு இசைத் துணுக்குடன் அறிமுகமாகும் யுவ்ராஜ் இந்திப் படப் பாடல்கள் சினிமா இசையின் ஒரு அடுத்த கட்டம்.
பாடல்களின் வரிசை இப்படியாக உள்ளது.
1. Main Hoon
2. Tu Meri Dost Hai
3. Shano Shano
4. Tu Muskura
5. Mastam Mastam
6. Zindagi
7 . Dil Ka Rishta
8. Manmohini Morey
9. Shano – Remix
இந்த வரிசையில் வரும் தூ மேரி தோஸ்த் ஹை ஒரு இனிய பாடலைக் கேட்ட அனுபவத்தைத் தருகிறது. (இடையில் வரும் வயலின் இசை அபாரம். இளையராஜாவின் how to name it, உம்பர்கட்கரசே – திருவாசகத்தில் வரும் ஒரு வயலின் இசை துணுக்கு எனக் கலவையாக நினைவுக்கு வருகிறது.)
ஏ. ஆர். ரஹ்மான் ஒரு சிறந்த இசைக் கலைஞர் என்பதை மீண்டும் நினைவுபடுத்த வைக்கும் ஒரு இசை வரிசை.
இன்று விஜய் டீவி இசைக் குடும்பத்தில் ஒரு பெண்மணி பழைய இந்திப்பாடல் ஒன்றை மிக அருமையாகப் பாடினார். அவருக்கு என் நன்றி.
(இவரை விட போனா வருவீரோ (படம்: வீராப்பு)என்ற பாடலைப் பாடிய பெண்மணிக்கு கூடுதல் மார்க் கிடைத்தது. அப்பாடலும் நன்றாகவே பாடப்பட்டது)
இப்பாடல் இன்று முழுவதும் என்னைத் தொந்திரவு செய்தபடியே உள்ளது.
மழைக்கு ஒதுங்கிய நேரத்தில் பாடிய பாடலாக இப்பாடல் திரைப்படத்தில் எடுக்கப்பட்டிருக்கும்.
அப்பாடலின் விவரங்கள் இதோ:
பாடல் – போல் ரே பப்பிஹரா… போல் ரே பப்பிஹரா
திரைப்படம்: Guddi (1971)
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: வசந்த் தேசாய்
பாடலாசிரியர்: குல்சார்
ஆண்டு: 1971
தயாரிப்பாளர்: என் சி சிப்பி
இயக்குனர்: ஹிரிஷிகேஷ் முகர்ஜி
நடித்தவர்கள்: அமிதாப் பச்சன், அசோக் குமார், தர்மேந்திரா, ஜெயா பச்சன், சுனிதா சன்யால், விஜய் ஷர்மா
இப்பாடலின் (ஆங்கில) வரிகள் இந்தியிலிருந்து ஆங்கிலத்தில்.
Bole re papiiharaa papiiharaa
Nit man tarase, nit man pyaasaa
Nit man pyaasaa, nit man tarase
Bole re…
Palako.n par ik buu.nd sajaae
Baithii huu.n saavan le jaae
Jaae pii ke des me.n barase
Nit man pyaasaa, nit man tarase
Bole re…
Saavan jo sa.ndesaa laae
Merii aa.nkh pe motii chhaae
Jaae mile baabul ke ghar se
Nit man pyaasaa, nit man tarase
Bole re…
இதன் எம்பி3 வடிவத்தை இங்கு இணைத்துள்ளேன்.
நீங்களும் கேட்டு மகிழலாமே ?
எண்ணம் எழாத விழிப்பு நிலை அடையப்பட்டதா ?
மீண்டும் முளைக்காதபடி வாசனைகள் வறுக்கப்பட்டனவா ?
கர்ம-பலன் அடையாத சகஜ நிலை வந்து விட்டதா ?
மனிதப் பிறவியின் நோக்கம் நிறைவேறியதா ?
- ஸ்ரீ சாது ஓம் ( ரமண கீதம்)
ஆறு மனமே ஆறு
இந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு
கட்டளைகள் 1 & 2.
கொடுக்கும் விலை
1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
கிடைக்கும் நிலை
உள்ளத்தில் உள்ளது அமைதி
உவமை
இதில் சொல்லுக்கு செய்கை பொன்னாகும்
கொடுக்கும் விலை
2. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்
கிடைக்கும் நிலை
இறைவன் வகுத்த நியதி
உவமை
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
நன்மை (கட்டளைகள் 1 & 2.)
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
கட்டளைகள் 3 & 4.
கொடுக்கும் விலை
3. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
கிடைக்கும் நிலை
உலகம் உன்னிடம் மயங்கும்
உவமை
இதில் உண்மை என்பது அன்பாகும்
கொடுக்கும் விலை
4. நிலை உயரும் போது பணிவு கொண்டால்
கிடைக்கும் நிலை
உயிர்கள் உன்னை வணங்கும்
உவமை
பெரும் பணிவு என்பது பண்பாகும்
நன்மை (கட்டளைகள் 3 & 4.)
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
கட்டளைகள் 5 & 6.
கொடுக்கும் விலை
5. ஆசை கோபம் களவு கொண்டவன்
கிடைக்கும் நிலை
பேசத் தெரிந்த மிருகம்
உவமை
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
கொடுக்கும் விலை
6. அன்பு நன்றி கருணை கொண்டவன்
கிடைக்கும் நிலை
மனித வடிவில் தெய்வம்
உவமை
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
நன்மை (கட்டளைகள் 5 & 6.)
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
சுதா ரகுநாதன் பாடிய மானசப் பொய்கையிலே … என்ற தொகுப்பில் உள்ள நாளை வரும் என்று நம்பலாமா ?
என்ற பாடலைக் கேட்டவர்கள் யாராவது உண்டா ?. இப்பாடலைக் கேட்ட உடன் என் மனம் அடைந்த உணர்வுகளை வார்த்தையில் எழுத முடியாது என்று தோன்றினாலும், இது ஒரு பகிர முடியாத உன்னத அனுபவம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். பொதுவாகவே முருகன் பாடல்கள் என்பது மனதை உலுக்கி விடும் இயல்பாக அமைவது எனக்கு ஒரு வியப்பு. உதாரணமாக, பல பாடல்கள் என்னால் சொல்ல முடியும்.
என் அவதானிப்பு இப்படியாக
1. பாதிமதினதி – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)
2. பக்தியால் யான் உனைப் பல காலம் – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)
3. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகனே – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு ( முருகன் பாடல்கள்)
இப்பாடல்கள் எழுதியவர், பாடியவர், ராகம், பின்ணணி இசை, ஒலிப்பதிவு என்று பல அம்சங்கள் சேர்ந்த ஒன்று.
கந்த சஷ்டிக் கவசம் பாடலின் உக்கிரகம் அதைக் கேட்டவர்களுக்கு நன்கு தெரியும். ( நான் கேட்டது சூலமங்கம் சகோதரிகள் பாடியது)
அதே வரிசையில் சண்முக கவசமும் நான் பல முறை (சஷ்டி கவசத்தை விட) திரும்பத் திரும்பக் கேட்கும் ஒரு ஒரு ஒலி வடிவம். ( சீர்காழி கோவிந்த ராஜன் பாடியது)
இப்படியாகச் சில பாடல்கள் மூலம் நான் முருகன் பாடல்கள் பற்றிய ஒரு அபிப்பிராயமும், விருப்பமும் கொண்டிருந்தேன்.
சுதா ரகுநாதன் பாடிய பாடலினை எழுத்து வடிவில் இங்கு பதிந்துள்ளேன். இப்பாடலில் வரும் “மனமுருகி” என்ற சொற்பிரயோகம் சுதா ரகுநாதனால் பல விதங்களில் ஏற்ற இறக்கத்துடன் பாடப்பட்டது கேட்பவர் மனம் உருகிவிடும் சக்தி படைத்தது.
நாளை வரும் என்று நம்பலாமா ? (2)
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
வேலைப் பிடித்தக் கந்தவேளை மனமுருகி(4)
காலை மாலை இரு வேளையும் துதிக்காமல்(2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
அழகான வாலிபம் அணங்குடனே தீரும் (2)
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும் (2)
அழகான வாலிபம் அணங்குடனே தீரும்
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும்
திருமுருகன் நாமம்
நாமம்
திருமுருகன் நாமம் நினைக்க நேரமில்லை (2)
மறுபிறவி என்பது எங்கோ தெரியவில்லை (2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?
நம்பலாமா ? நம்பலாமா ?
இப்பாடல் தொகுப்பில் உள்ள மற்ற பாடல்களில் வேறு சில பாடல்களும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத தன்மையுடைய சிறப்புடையவை.
1. அபிராமி அந்தாதியின் தனம் தரும் கல்வி வரும் எனத் துவங்கும் ஒரு அம்மன் பாடல்
2. மானசப் பொய்கையிலே
3. நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே
![]()