பொம்மைக் கொலு ஜோக்கு
அக்டோபர் 8, 2008தசாவதாரம் ஜோக்கு
ஜூலை 11, 2008ராஜாக் கதை
மே 15, 2007இந்த ஞாயிறு எங்கள் பகுதி நகைச்சுவை மன்றத்திற்குப் போயிருந்தேன்.
வழக்க்ம் போல படித்த, பார்த்த மற்றும் கேட்ட ஜோக்குகளே உலா வந்து கொண்டிருந்தன. இதன் மத்தியில் ஒரு பெண் குழந்தை சுமார் 5 அல்லது 6 வயது தான் இருக்கும். மேடையேறி, ஜோக்கு சொல்ல ஆரம்பித்தாள்.
அவள் சொன்ன மொழியிலேயே இனி அந்த ஜோக்கு.
என் பெயர் பவித்ரா.
நான் உங்களுக்கு ஒரு ஜோக்கு இன்னைக்குச் சொல்லப் போறேன்.
(அமைதி சில வினாடிக்கு. அவள் முகத்தில் சிரிப்பு)
ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து ….
(வாய் பொத்தி சிரிப்பு. மேலே பேச முடியவில்லை)
சில வினாடிக்குப் பிறகு,
ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து ….
(மேலும் வாய்விட்டுச் சிரிப்பு. மேலே பேச முடியவில்லை)
அப்பெண் குழந்தையின் குதூகலம் மன்றத்தில் இருந்த எல்லோரையும் தொற்றிக் கொண்டு விட்டது. ஆளாளுக்குச் சிரிப்புடன், “சொல்லுமா, நாங்களும் கேட்டுச் சிரிப்போம்ல” என்று பேசத் துவங்கிவிட்டனர்.
அப்பெண்ணால் ஜோக்கு சொல்லவே முடியாத அளவிற்குச் சிரிப்பால் அவள் முகம் நிறைந்துவிட்டது.
மேலும், சில வினாடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, தீர்மானமான் முகத்துடன், ஆனால் சிரிப்பு கலையாமல் பேசச் துவங்கினாள்.
ஒரு நாள் மந்திரி ராஜாக்கிட்ட வந்து, “ராஜா, ராஜா, உங்களப் பார்க்கிறத்துக்கு ஒருத்தன் கிலோக் கணக்குல பேரிச்சம்பழம் வச்சிண்டு வாசல்ல நிக்கிறான்”. னு சொன்னார்.
அதுக்கு அந்த ராஜா, “மந்திரி, வாசல்ல போய் நாம கட்டி வச்சிருக்கிற ஆராய்ச்சி மணி இருக்கான்னு பார்த்துட்டு வா” அப்படின்னார்.
இந்த ஜோக்கு சொன்னதுக்குப் பிறகு மன்றத்தில் பரவிய சிரிப்பலை அடங்க வெகு நேரமாயிற்று.
எனக்கு இந்த ஜோக்கை விட அது சொல்லப்பட்ட விதம் மிகவும் கவர்ந்தது.
அப்பெண் குழந்தையைப் பாராட்டி, பேனா பரிசாகக் கொடுத்தாரர்கள்.
வீட்டுக்கு வந்து நான் திரும்பத் திரும்ப இந்த நிகழ்ச்சியையே யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் தாயார் என்னிடம் வந்து என்ன? வெளிய போய்ட்டுவந்து யோசனையா இருக்க ? என்று வினவினார்.
அவரிடம் இந்த ஜோக்கை அப்படியே நிகழ்ச்சி நடந்தபடிக்குச் சொன்னேன்.
அவருக்கு இந்த ஜோக்கு புரியவில்லை. இது எனக்கு வியப்பாக இருந்தது.
இது ஒரு சம்பவம். ஆனால் இதில் ஒரு நகைச்சுவை உள்ளது என்பது, மறைவாக உள்ளது.
என் தாயாருக்கு இரும்புக்குப் பேரீச்சம்பழம் தருவார்கள் என்பது தெரியும். இந்த நிகழ்ச்சியில் அதைச் சட்டென்று உடனே புரிந்து கொள்வதில் அவருக்கு இயலமுடியாமல் போயிற்று.
அவருடைய சிறு வயதில், அவரிடம் வந்து, இஸ்திரிக்கு என்று துணிகளை வாங்கிப் போனவன் திரும்ப வரவேயில்லை. பிறகு தான் தெரிந்தது, அவன் பிளாஸ்டிக் பொருள்களைப் பழைய துணிகளுக்கு விற்பவன் என்று.
இந்த நிகழ்ச்சி பல முறை எங்கள் வீட்டில் பேசப்பட்டதுண்டு. இதிலும் நகைச்சுவை உண்டு.
இதையே நகைச்சுவையாக, இஸ்திரிக்குக் துணி கேட்க வந்தவனிடம், “இதுக்கு என்ன கிடைக்கும், பக்கெட்டா, அல்லது டப்ப்ப்பா ஏதாவது தானா ? என்று கேட்டால், புரிந்து கொள்வது எப்படியோ அப்படியே தான் இந்த ஜோக்கும்.
உலகத்தில் உள்ள கதைகள் யாவும் மனதில் ஒளிந்துள்ளன.
மனம் விழிப்படைந்தால் தானாகவே, அக்கதைகள் வெளிவந்துவிடும்.

RAM பதிப்பித்தது. 
RAM பதிப்பித்தது.
RAM பதிப்பித்தது.