சீதையைத் தேடி அனுமன் இலங்கை நகர் உள்ளே செல்கிறான்.
அசோக வனத்திலே அவளைக் கண்டுவிடுகிறான்.
இராமனின் கணையாழியைத் தருகிறான்.
அடையாளாங்களை விவரிக்கிறான்.
சுக்ரீவனின் நட்பைத் தெரிவிக்கிறான்.
தனிமையில் தவிக்கும் தனக்கு நன்மை சொன்னவனைச் சீதை
நன்றி தெரிவிக்கிறாள். வாழ்த்துகிறாள். பின்பு மெள்ள கேட்கிறாள்,
“இலங்கை வரும் வழியில் அளக்கவும் அரிதான அலைகடலைக்
கடக்க வேண்டுமே ? சிறு குரங்கான நீ அதை எப்படிக் கடந்திருக்கமுடியும் ?”.
இக்கேள்வியால் மனம் சிதறிய அனுமன் வானளாவி நின்றான்.
எட்டுத் திக்குகளிலும் உள்ள உயிர்கள் அவனைப் பார்த்தன.
RAM பதிப்பித்தது.