பழக் கதைகள் 9

December 22, 2008

மிகப் பெரிய பழத் தோட்டத்திற்குச் சொந்தக்காரன் அவன். அவன் தோட்டத்தில் விளையும் பழங்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவன் தொழிற்சாலையில் இந்தப் பணியில் ஈடுபடுவோர் பலர்.ஆனால், அவர்கள் தம் வாழ்நாளில் அந்தப் பழங்களை சுவைத்துப் பார்த்ததில்லை. ஏனெனிறால், அவ்விதம் செய்வோரின் வேலை உடனே போய்விடும். மேலும், அந்தப் பழங்கள் உள்ளூரில் விற்பனையாவதில்லை. அவற்றை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றால் மிகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்தப் பழ ஏற்றுமதியால் அந்த ஊர் உலக அளவில் மிகப் பிரபலம்.

அவன் தன் வெற்றிக்குக் காரணமாக சொல்வான், ” ஏழ்மையும், பட்டினியும் தான் உழைப்புக்கு ஆதாரம்.”