வாழ்க்கை

டிசம்பர் 30, 2008

காய்ந்த ஒரு சிறு வரட்டி (பசுமாட்டின் சாணித் துண்டு) இல் முளைத்த

ஒரு செடி

வாழ்க்கை

வாழ்க்கை


சிறிய திருவடி

டிசம்பர் 28, 2008

சீதையைத் தேடி அனுமன் இலங்கை நகர் உள்ளே செல்கிறான்.
அசோக வனத்திலே அவளைக் கண்டுவிடுகிறான்.
இராமனின் கணையாழியைத் தருகிறான்.
அடையாளாங்களை விவரிக்கிறான்.
சுக்ரீவனின் நட்பைத் தெரிவிக்கிறான்.

தனிமையில் தவிக்கும் தனக்கு நன்மை சொன்னவனைச் சீதை
நன்றி தெரிவிக்கிறாள். வாழ்த்துகிறாள். பின்பு மெள்ள கேட்கிறாள்,
“இலங்கை வரும் வழியில் அளக்கவும் அரிதான அலைகடலைக்
கடக்க வேண்டுமே ? சிறு குரங்கான நீ அதை எப்படிக் கடந்திருக்கமுடியும் ?”.

இக்கேள்வியால் மனம் சிதறிய அனுமன் வானளாவி நின்றான்.
எட்டுத் திக்குகளிலும் உள்ள உயிர்கள் அவனைப் பார்த்தன.


பழக் கதைகள் 9

டிசம்பர் 22, 2008

மிகப் பெரிய பழத் தோட்டத்திற்குச் சொந்தக்காரன் அவன். அவன் தோட்டத்தில் விளையும் பழங்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவன் தொழிற்சாலையில் இந்தப் பணியில் ஈடுபடுவோர் பலர்.ஆனால், அவர்கள் தம் வாழ்நாளில் அந்தப் பழங்களை சுவைத்துப் பார்த்ததில்லை. ஏனெனிறால், அவ்விதம் செய்வோரின் வேலை உடனே போய்விடும். மேலும், அந்தப் பழங்கள் உள்ளூரில் விற்பனையாவதில்லை. அவற்றை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றால் மிகுந்த விலை கொடுக்க வேண்டியிருக்கும். இந்தப் பழ ஏற்றுமதியால் அந்த ஊர் உலக அளவில் மிகப் பிரபலம்.

அவன் தன் வெற்றிக்குக் காரணமாக சொல்வான், ” ஏழ்மையும், பட்டினியும் தான் உழைப்புக்கு ஆதாரம்.”


பழக் கதைகள் 8

டிசம்பர் 14, 2008

ஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த மாதுளம் பழங்களை ஒரு கூடையில் இட்டு தன் வீட்டு வாசலில் வைத்தான்.
அதன் அருகில் ஒரு அட்டையில் இப்படி எழுதி வைத்தான்.
“இந்தப் பழங்கள் இலவசம். ஆளுக்கு ஒன்று என எடுத்துக் கொள்ளலாம்.”
அந்தப் பழங்கள் அப்படியே மாலைவரை இருந்தன. யாரும் அவற்றைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை.

மறுநாள், அவன் அந்த அட்டையில், இப்படி எழுதி வைத்தான்.
“இந்தப் பழங்களுக்கு ஒரு விலையுண்டு. விலை கொடுத்தால் தான் தெரியும் இப்பழத்தின் அருமை.”
அவன் எழுதி வைத்துவிட்டு உள்ளே செல்லும்போதே சாலையில் சென்ற மக்களால் அவன் அழைக்கப்பட்டான்.
பலர் கூடி வந்து அப்பழங்களைப் பற்றி விசாரித்து விலை கொடுத்து வாங்கிச் சென்றனர்.

-கலீல் கிப்ரன் கதையிலிருந்து


இங்கேயே இப்போதே

டிசம்பர் 9, 2008
இங்கேயே இப்போதே

இங்கேயே இப்போதே