பழக் கதைகள் – 7

நவம்பர் 30, 2008

30112008


அட்டகாசமான பாடல்கள் – யுவ்ரா(ஆ)ஜ்

நவம்பர் 18, 2008

பித்தோவன் இசைமேதையின் ஒரு இசைத் துணுக்குடன் அறிமுகமாகும் யுவ்ராஜ் இந்திப் படப் பாடல்கள் சினிமா இசையின் ஒரு அடுத்த கட்டம்.

பாடல்களின் வரிசை இப்படியாக உள்ளது.
 
 1. Main Hoon 

 2. Tu Meri Dost Hai
 
 3. Shano Shano 
 
 4. Tu Muskura 
 
 5. Mastam Mastam 
 
6.  Zindagi 
 
7 . Dil Ka Rishta 
 
8.  Manmohini Morey
 
 9. Shano – Remix

இந்த வரிசையில் வரும் தூ மேரி தோஸ்த் ஹை ஒரு இனிய பாடலைக் கேட்ட அனுபவத்தைத் தருகிறது. (இடையில் வரும் வயலின் இசை அபாரம். இளையராஜாவின் how to name it, உம்பர்கட்கரசே – திருவாசகத்தில் வரும் ஒரு வயலின் இசை துணுக்கு எனக் கலவையாக நினைவுக்கு வருகிறது.)

ஏ. ஆர். ரஹ்மான் ஒரு சிறந்த இசைக் கலைஞர் என்பதை மீண்டும் நினைவுபடுத்த வைக்கும் ஒரு இசை வரிசை.


பழக் கதைகள் – 6

நவம்பர் 16, 2008

கோழை உலகின் உயிர்த்துயரம் பொறுக்காமல் சாந்தியைத் தேடியலைந்தவனின் கதை இது.

அவன் தன் வாழ்நாளில் யாருக்கும் உதவி செய்ததில்லை. 
அவன் ஒரு கோழை.  உதவி என்ற பெயரில் ஆபத்தைப் பலமுறை தன் வாழ்வில் சந்தித்தவன். அவன் இறந்த பிறகு அவனது கணக்கு வழக்கு சரிபார்க்கப்பட்டது.

மேலுலகில். இறைவன் சொன்னார், மகனே நீ நரகத்திற்கு போகக் கடவாய்.அவன் அழுதபடி சொன்னான், “இல்லை. நான் போக மாட்டேன். நான் ஒரு நல்லது கூடவா என் வாழ்வில் செய்யவில்லை ? நீங்கள் சரிபார்த்த கணக்கில் பிழை உள்ளது” என்றான். இந்த எதிர்வினையில் குழம்பிய கடவுள் அவன் கணக்கை மறுபடியும் பார்த்தார். அதில் ஒரு நிகழ்ச்சி அவரை யோசிக்க வைத்தது.

அதன்படி ஒரு நாள் அவன் ஒரு வாழைப்பழத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு வீசியெறிந்திருக்கிறான். இந்த நிகழ்ச்சியை கடவுள் அவனுக்கு நினைவுபடுத்தினார். அவனும் அதனை ஒத்துக் கொண்டான். மேலும், சொன்னான், அந்த வாழைப்பழம் அழுகியிருந்தது அதனால் தான் கீழே போடுவதற்கு பதிலாக பிச்சைக்காரனுக்குத் தூக்கியெறிந்தேன். கடவுள் சொன்னார், மகனே அந்தப் பழம் பாதி நன்றாக இருந்தது எனவே, நீ செய்த செயல் புண்ணியத்தில் வருகிறது. இந்த ஒரு செயலால் உனக்கு சொர்க்கம் கிடைக்க வாய்ப்புண்டு. நீ சொர்க்கத்துக்குப் போகலாம் என்றார்.

ஆனால், அவன் செல்ல வேண்டிய வழி நரகத்தைத் தாண்டி சொர்க்கத்துச் செல்வதாக அமைந்திருந்தது. மேலும், அவன் நரக்த்தைத் தாண்டி செல்ல, அவன் வீசியெறிந்த வாழப்பழத்தை அந்தரத்தில் தொங்கியபடி பிடித்துக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. அவ்விதம் அவன் செல்லும்போது, நரகத்தில் உள்ளோர் அவன் காலைத் தொங்கிப் பிடித்தபடி தம்மையும் சொர்க்கத்துக்குக் கூட்டிச் செல்லவேண்டும் என்று அடம் பிடித்தனர். இதனால், அவன் மேலும் கனமடைந்து வாழைப்பழ பிடிப்பை விட்டு நரகத்தில் வீழும் சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது, அவன் சொன்னான், “நானே என்னோட பாதி நல்ல பழத்தைப் பிடித்துக் கொண்டு போறேன். இதுல நீங்க வேற தொல்லை”: என்றான். அவ்விதம் சொன்ன அடுத்த வினாடி அவன் நரகத்தில் வீழ்ந்தான்.

அப்போது கடவுள் சொன்னார், “கடைசி சந்தர்ப்பத்திலும் நீ அந்த வாழைப்பழத்தை உன்னுடையது என்று சொன்னது தான் தவறு”