எலந்தை பழுத்திருக்கும்
ஏறி உலுக்கி விட்டா
சித்தாடைக் குள்ளிருக்கும்
செண்டு மல்லி ரெண்டு தாரேன்.
இலந்தை பழம் போல
இங்கிதமாய் நானிருக்க
சாணி உருண்டைக்காக
சாமவழி போகலாமா ?
***
கூடி இருந்த் இடம்
கும்மாச் சரம் போட்ட இடம்
வாழப் பழம் தின்ன இடம்
பாழாக் கிடக்குது பார்
***
எலுமிசம் பழம் போல
இருவருமே ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசமானோம்
***
தமிழர் நாட்டுப் பாடல்களிலிருந்து
RAM பதிப்பித்தது.