பழக் கதைகள் – 5

அக்டோபர் 30, 2008

தெரியவில்லை
அறை வெண்மை என
சிகப்பு ஆப்பிளைப் பார்க்கும் வரை

- எங்கோ படித்தது


எதில் ?

அக்டோபர் 27, 2008

சுவை அறிவால் மீன் தூண்டிலில் சிக்குகிறது
தீயைக் கண்டு அதில் வீழ்ந்து விட்டில் பூச்சி இறக்கிறது.
ஸ்பரிசத்தை நம்பி யானை பிடிபடிகிறது
ஓசைக்கு அடிமையாகி மான் பிடிபடுகிறது
மணத்தை நாடி வந்து வண்டு மலரில் அகப்படுகிறது.

இந்த எல்லாப் புலன்களுக்குள்ளான மனித உயிர் எதில்

சிக்குகிறது ?


பழக் கதைகள் – 4

அக்டோபர் 23, 2008

அந்தக் கரடிக்கு மரம் ஏறத் தெரியாது.ஆனால், அந்த மரத்தில்
பழுத்த பழத்தை சாப்பிட்டுப் பார்க்க ஆசை வந்துவிட்டது.
தன் ஆசையை தன் பறவை நண்பனிடம் சொன்னது.அதற்கு
அந்தப் பறவை பழத்தைப் பறித்துத் தர உடனடியாகச் சம்மதம் சொல்லவில்லை.

கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. ஆனால், கரடிக்குத் தேன் கிடைக்கும் இடம் தெரியாது. இருந்தாலும், பழம் தின்னும் ஆசையில் கரடி அப்பறவையைச் சம்மதிக்க வைக்க ஒரு யோசனை செய்தது. அதன்படி, அக்கரடி பழம் பறித்துக் கொடுத்தால் அப்பறவைக்கு நல்ல சுவையான தேனைக் கொடுப்பதாக வாக்களித்தது. …………………………………………
……………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………..
……………………………………………………………………………………………..


பழக் கதைகள் – 3

அக்டோபர் 12, 2008

எலந்தை பழுத்திருக்கும்
ஏறி உலுக்கி விட்டா
சித்தாடைக் குள்ளிருக்கும்
செண்டு மல்லி ரெண்டு தாரேன்.

இலந்தை பழம் போல
இங்கிதமாய் நானிருக்க
சாணி உருண்டைக்காக
சாமவழி போகலாமா ?

***
கூடி இருந்த் இடம்
கும்மாச் சரம் போட்ட இடம்
வாழப் பழம் தின்ன இடம்
பாழாக் கிடக்குது பார்

***

எலுமிசம் பழம் போல
இருவருமே ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசமானோம்

***

தமிழர் நாட்டுப் பாடல்களிலிருந்து


பொம்மைக் கொலு ஜோக்கு

அக்டோபர் 8, 2008
பொம்மைக் கொலு ஜோக்கு

பொம்மைக் கொலு ஜோக்கு


பழக் கதைகள் – 2

அக்டோபர் 5, 2008

பாண்டவர்களும், கெளரவர்களும் சிறுவர்களாக இருந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி – அதன் புரிதல் முக்கியமான ஒன்று.

ஒரு நாள் எல்லா சிறுவர்களும், மாமரத்தில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பல சிறுவர்கள் மாமரக் கிளையில் உள்ள மாம்பழங்களைப் பறித்து உண்டனர்.

இதைக் கண்ட பீமன் மரத்தின் கீழே நின்றபடி யோசித்தான். பிறகு, தன் அருகில் இருந்த துரியோதனன், மற்றும் தருமனிடம் சொன்னான், “நாம் பழங்களைத் தேடிப் போகக்கூடாது. நம்மைத் தேடி தான் பழங்கள் வர வேண்டும்”.

இதைக் கேட்ட துரியோதனன், வியப்புடன் கேட்டான், “பீமா, இது எப்படி முடியும்?”

பீமன் இப்படி முடியும் என்று சொன்னபடி மாமரத்தின் தண்டுப் பகுதியைப் பிடித்து வேகமாக உலுக்கினான். இச்செயலால், பல மாம்பழங்கள் உதிர்ந்து கீழே விழுந்தன. மேலும், மரத்தில் அமர்ந்திருந்த கெளரவர் சிறுவர்களும் கீழே விழுந்து விட்டனர். அவர்களுக்கு பலத்த அடிபட்டது.

இதனால், கோபமுற்ற துரியோதனனும், கெளரவர்களும், பீமன் மீது பகை கொண்டனர்.

படைப்பாற்றல் முக்கியம், ஆனால், அதுவே மற்றவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக் கூடாது.


பழக் கதைகள் – 1

அக்டோபர் 1, 2008

ஒரு நாள் அந்த நண்டிற்கு சுவையான ஒரு இனிப்பு உண்ணக் கிடைத்தது. அதன் மணமும் சுவையும் அதை மயக்கியது. அந்த நண்டு ஆசையுடன் அந்த இனிப்பை உண்ணச் செல்லும்போது ஒரு குரங்கு அங்கே வந்தது.

அந்தக் குரங்கிற்கும் அந்த இனிப்பின் மேல் ஆசை வந்து விட்டது.
அப்போது, அந்தக் குரங்கு ஒரு தந்திரம் செய்து அந்த இனிப்பை நண்டிடமிருந்து பறிக்க செயலில் இறங்கியது.

அதன்படி அந்தக் குரங்கு, நண்டிடம் ஒரு மாங்கொட்டையைக் கொடுத்தது. பின்பு பின்வருமாறு பேசியது, “நண்டே, நான் உனக்கு காலத்திற்கும் பயன்படும் ஒரு பரிசு கொடுக்கிறேன். அது தான் இந்த மாங்கொட்டை. இதை நீ மண்ணில் நட்டு மரமாக வளர்த்தால் உனக்கு பல மாங்கனிகள் எதிர்காலத்தில் உண்ணக் கிடைக்கும். இவ்விதம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து உனக்கு உதவ என்னைவிட்டால் யாரும் உனக்குக் கிடையாது என்றது.

இதைக் கேட்ட நண்டு, உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? மிக்க நன்றி என்றது. குரங்கு உடனே சொன்னது, நீ எனக்குக் கைம்மாறு எல்லாம் செய்ய வேண்டாம். உன் கையில் இருக்கும் இனிப்பை எனக்கு கொடு அது போதும் என்றது.

நண்டும் இனிப்பைக் குரங்கிடம் கொடுத்துவிட்டு, மாங்கொட்டையை நம்பிக்கையுடன் மண்ணில் புதைத்து, அது மரமாக வளரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்தது.

சில காலம் கழித்து, அந்த மாங்கொட்டை ஒரு மாமரமாக வளர்ந்து விட்டிருந்தது. அந்த நண்டிற்கு அந்த மரத்தை பார்க்கும்போதெல்லாம், குரங்கின் நினைப்பு வரும். நன்றியோடு அக்குரங்கை மனதில் வாழ்த்தும்.

அம்மாமரத்தில், பல மாங்கனிகள் பழுத்துத் தொங்கத் துவங்கின. ஆனால், நண்டினால் அம்மாம்பழங்களை மரத்தில் ஏறி உண்பது மிகவும் சிரமாக இருந்தது. அக்காலகட்டத்தில், முன்பு உதவிய குரங்கு மறுபடியும் அப்பக்கமாக வந்தது. நண்டினையும், மாமரத்தினையும் பார்த்தது. அம்மாம்பழங்களைக் கண்ட உடன் அவைகளைச் சாப்பிட குரங்கிற்கு ஆசை வந்துவிட்டது.

அக்குரங்கு, நண்டிடம் சொன்னது, “நண்டே, நான் மரத்தில் ஏறி, சுவையான மாம்பழங்களை ருசிபார்த்து உனக்குத் தரட்டுமா ? என்று கேட்டது.நண்டுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. குரங்கை உடனே சென்று பறித்துத் தருமாறு அவசரப்படுத்தியது.

குரங்கும், மரத்தில் ஏறி பல மாம்பழங்களை ருசித்து உண்டது ஆனால் ஒன்றைக்கூட கீழேயுள்ள நண்டுக்குத் தரவில்லை. கீழே இருந்து நண்டு, குரங்கிடம் பழங்களைப் பறித்துப் போடுமாறு மறுபடியும் கேட்டது.

இதைக் கேட்ட குரங்கிற்கு ஆத்திரம் வந்தது. அது மிகப் பெரிய ஒரு மாம்பழத்தைப் பறித்து, இந்த நண்டே பிடித்துக் கொள் என்று வேகமாகத்
தூக்கியெறிந்தது. அந்த மாம்பழத்தைப் பிடிக்க முயன்ற நண்டு, அந்த மாம்பழத்தாலேயே அடிபட்டு இறந்துபோனது.

இறக்கும்போது, அந்த நண்டு நினைத்துக் கொண்டது, “எனது நண்பன் குரங்கு மிகவும் நல்லவன். என்னால் தான் அந்த மாம்பழத்தைச் சரியாகப் பிடித்து உண்ணமுடியவில்லை”