விடுதலை

செப்டம்பர் 28, 2008

அந்த வண்ணானின் வீடு கழுதை உட்பட எல்லாப் பொருளும் அவன் வாங்கிய கடனுக்கு ஜப்தியாக வேறு ஒருவனுக்குப் போக இருந்தது.
அப்போது, அந்த வண்ணான் தான் ஆசையாக வளர்த்து ஆளாக்கிய கழுதையிடம் சொன்னான், “கழுதையே, நாளை முதல் உனக்கு வேறு எஜமானன், வேறு விதமான வாழ்க்கைச் சூழ்நிலை. எனவே, நீ இனி இங்கிருக்காதே. இந்த இரவு நேரத்தில் எங்காவது ஓடிப் போய்விடு. நான் உனக்கு விடுதலையை உபதேசிக்கிறேன்”

அதற்கு அந்தக் கழுதை , “வேறு எஜமானன், வேறு வாழ்க்கைச் சூழ்நிலை என்றாலும் நான் சுமக்கப் போகும் சுமை என்பது ஒன்றுதான். எனவே, எனக்கு ஒரு மாற்றமும் இல்லை. உனக்குத் தான் விடுதலையின் பொருள் என்பது என்னவென்று விளங்கவில்லை.” என்று சொன்னது.