விசுவாசி

செப்டம்பர் 27, 2008

அந்தத் திருடன் தன் கையில் இருந்த இறைச்சியை வீட்டுக் காவல் நாயை நோக்கி வீசியெறிந்தான். அவன் நோக்கம், அந்த நாய் அதை உண்ணும் வேளையில் வீட்டிற்குள் நுழைந்து திருடுவது தான்.

இறைச்சியை நோக்கி ஓடிவந்த அந்த நாய், அந்த இறைச்சியை முகர்ந்து பார்த்து சப்புக் கொட்டியது. ஆனால், அந்த இறைச்சியை உண்ணவில்லை. அது அந்த திருடனை நோக்கிப் பேசியது, “இந்த இறைச்சி தரும் லாபமும், சுகமும் எனக்குச் சில நிமிடங்களே. இந்த நிமிடங்கள் நான் இவ்வளவு நாள் என்னை வளர்த்த வீட்டுக்காரனுக்கு துரோகம் இழைக்கும் நிமிடங்கள்.
இந்த நிமிடங்கள் கழிந்த பின் நான் வருந்தும் காலம் இந்த நேரத்தை விட மிக அதிகம். எனவே, நான் இதைத் தொட மாட்டேன். நீ யார். உன் தேவை என்ன ? என்று வினவியது.

இந்த அணுகுமுறையில் தோல்வியுற்றத் திருடன் தலை குனிந்து பதில் பேசாமல் மெளனமாக அங்கிருந்து விலகிச் சென்றான்.