முல்லாவின் வீட்டு வாசலில் அந்தப் பறவை மிகவும் அமைதியாக தன் சிறகுகளைத் தன் அலகால் கோதியபடி அமர்ந்திருந்தது.
இதைக் கண்ட முல்லாவிற்கு ஆச்சரியம். இதைப் போன்ற ஒரு பறவையை அவர் கண்டதேயில்லை.
அவர் பல வகையில் யோசித்துப் பார்த்தார். அவரால் ஒரு முடிவிற்கு வர இயலவில்லை.
கடைசியில் அவர் ஒரு யோசனை செய்தார். அதன்படி செயல்படவும் முனைந்தார்.
சத்தமில்லாமல் சென்று அந்தப் பறவையை அமுக்கிப் பிடித்தார்.
பிறகு, அதன் இறக்கைகள் சிலவற்றைப் பிய்த்து எறிந்தார்.
கழுத்துப் பகுதியில் உள்ள சிறகுகளின் அடர்த்தியைக் கத்தரித்துக் குறைத்தார்.
இப்போது அந்தப் பறவை அவருக்கு ஏற்கனவே கண்டறிந்த ஒரு பறவையைப் போல ஆகியிருந்தது.
முல்லா மிக்க மகிழ்ச்சியுடன் அப்பறவையை பறக்க விட்டார்.
RAM பதிப்பித்தது.