பார்வைக் கோணம்

செப்டம்பர் 19, 2008

அந்த மான் தண்ணீரில் தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்தபடியே யோசனையில் ஆழ்ந்தது. அதன் கொம்புகள் அதற்கு மிகுந்த மனமகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன் கொம்புகளின் அழகைப் பார்த்து மகிழ்ந்தபடியே, தன் கால்களைக் கண்டது. ஒல்லியான, குச்சிபோன்ற வடிவிலான அதன் கால்கள்  அந்த மானிற்கு மிகுந்த மனக் கஷ்ட்டத்தையும், வெறுப்பையும் அளித்து.

அந்த மான் தன்க்குள் சொல்லிக் கொண்டது, ” சே, என்ன ஒரு கடவுளின் படைப்பு நான். என் கொம்புகள் அழகாகவும், கால்கள் அசிங்கமாகவும் உள்ளனவே”.

அப்போது திடீரெனப் பாய்ந்து வந்தது ஒரு சிங்கம்.
பதறி விரைந்து வேகமாக ஓடியது அந்த மான்.

அதன் வேகமான ஓட்டத்திற்குத் தடையாக அதன் கொம்புகள் காட்டு மரக் கிளைகளில் மாட்டிக் கொண்டு, வேகமாக ஓட விடாமல் தடுத்தன.
இதனால், அந்த மான் சிங்கத்திடம் மாட்டிக் கொண்டு உயிரை விட நேர்ந்த்து.

அந்தக் கடைசிக் கணத்தில் அந்த மான் மனதில் முனகியது,
” ஆபத்தில் உதவிய கால்களைப் பழித்தேன். துன்பத்தில் மாட்டிவிட்ட கொம்புகளைக் கொண்டாடினேன்.”