கால வேகம்

அந்த முயல் ரத்தச் சகதியில் உயிரை விடும் கோலத்தில் துடித்தபடி இருந்தது.

ஒரு கழுகால் கொத்தி இந்த நிலைமைக்கு ஆளாகியிருந்தது அந்த முயல்.

அப்போது அந்தப் பக்கமாக வந்து, அதைக் கண்ட ஒரு குருவி,
” என்ன முயலே, நீ விரைந்து ஓடுவாயாமே ? காற்றின் வேகம் உன் வேகமாமே ? உன் கால்களுக்கு என்ன ஆச்சு ?”  என்று கேலி பேசியது.

இப்படிக் கேலி பேசியபடியே இருந்த குருவி, அதன் பின் பக்கம் ஒரு வல்லூறு வந்ததைக் கவனிக்கவில்லை.

பாதி பேசியபடி இருந்த குருவியை, வல்லூறு சட்டெனத் தூக்கிக் கொண்டு பறந்து போனது.

- ஈசாப் கதையிலிருந்து.

மறுமொழி இடுக