அந்த வீட்டுக்காரனுக்கு தினமும் ஒரு பூனையால் பெரும் தொல்லை ஏற்பட்டபடி இருந்தது. இதனால், அவன் அந்தப் பூனையைப் பிடித்துக் கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டான்.
ஒரு நாள், அவன் அந்த பூனையை நேருக்கு நேர் சந்திக்கும்படியான சூழ்நிலை உண்டானது. கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், அவன் கையில் கிடைத்தக் கட்டையை எடுத்து அடிக்க ஓங்கினான்.
அப்போது, அந்தப் பூனை அவனிடம், “நண்பா, நான் உன் வீட்டு எலிகளைப் பிடித்து உண்டு உனக்கு உதவினேனே, அதற்கு நீ தரும் பரிசு இது தானா ?” என்று வினவியது.
இந்தக் கேள்வியால் சற்று யோசித்த வீட்டுக்காரன், பின்பு சொன்னான்,
“பூனையே, நீ எலிகளைப் பிடித்து உண்டது எனக்காக அல்ல. உனக்காக. எப்படியென்றால், நீ எலிகளைக் கொன்று, உண்டு, அதன் பின் அடுத்த உணவிற்கு நீ எலிகள் சேர்த்துவைத்த உணவை உண்ணாமல், என் வீட்டு உணவை உண்டது எந்த வகையில் நியாயமானது ?” என்று சொல்லியபடியே, அந்தப் பூனையைக் கொன்று போட்டான்.
- ஈசாப் கதைகளிலிருந்து