அவன் மலை மேல் வளர்ந்த சந்தன மரச் சூழலில் வளர்ந்தவன். தினமும் சந்தன நீரில் குளிப்பவன்.
ஒரு நாள் அவன் மலை மேலிருந்து கீழே இறங்கி வரும்படியான சூழ்நிலை ஏற்பட்டது.
அப்படி ஒரு நாள் அவன் கீழே இறங்கி வந்த போது, தரையில் ஒரு மனிதனைச் சந்தித்தான். அந்த மனிதன் தினமும் பிழைப்புக்குச் சாக்கடையில் குளிப்பவன். அதனால், அவன் பிறகு நல்ல தண்ணீரில் ஒரு முறை குளிக்கும்படி ஆனது அவன் வாழ்க்கை.
இந்த மனிதனைக் கண்டவுடன், மலை மேல் வளர்ந்தவனுக்கு இரு முறை குளிப்பது வியப்பு ஏற்பட்டது.
சாக்கடையில் குளிப்பவனிடம் சந்தனத்தில் குளிப்பவன்
ஏன் இப்படி இரு குளியல் உனக்கு என்று கேட்டான்.
அதற்குச் சாக்கடையில் குளிப்பவன் எப்போதும் ஒரு முறை
நல்ல தண்ணீரில் குளிப்பது தான் சரியானது என்று விளக்கினான்.
இந்த விளக்கத்தால் சந்தனத்தில் குளிப்பவனும் இரு முறை
தினமும் குளிப்பது என்றாகிப் போனது.
RAM பதிப்பித்தது.