கூர்மை

செப்டம்பர் 8, 2008

சந்தோஷிப்பவனும், துக்கிப்பவனும் ஒருவரை ஒருவர் சந்தேகித்தனர்.
முட்டாளும், புத்திசாலியும் ஒருவரை ஒருவர் ஏமாற்றினர்.
நல்லவனும், கெட்டவனும் ஒருவரை ஒருவர் மறுத்தனர்.
சுயநலவாதியும், பொதுநலவாதியும் ஒருவரை ஒருவர் கேலி பேசினர்.
எனவே, சொர்க்கம் என்பது இல்லாமல் போனது.