அன்புடன் என் வலைப்பதிவிற்கு வாருங்கள்.
நான் மிகவும் களைத்து விட்டேன்.
அதிகமாக எழுதியதால் அல்ல.
நான் மேலும் என்ன எழுத வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தக் களைப்பு.
முக்கியமான கண்டுபிடிப்புகளைக் கூற சில வார்த்தைகளே போதும்.
அதிகமாகச் சொல்லிக்கொண்டே போனால் என்ன பயன் இருக்கும் ?
மாசற்ற சில சொற்களால் சொல்லத் தெரியாதவரே
உண்மையில் பல சொற்களால் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.
எனக்குச் சுய திருப்தி என்ற உணர்வு இன்னும் வரவில்லை.
இரவில் உலாவும்போது, சிறந்த இசையைக் கேட்கும் போது,எனக்குத் தேவைப்படும் பொருட்கள் எல்லாம் எனக்குக் கிடைத்துவிடும் போது இந்த மாதிரியான எண்ணங்கள் என்னில் எழுகும்போது, அந்த எண்ணங்களை என்னெவென்று அழைப்பது என்பது எனக்குத் தெரியவில்லை.
நான் கண்ட சாகசங்கள், என் நினைவில் ஊறித் திளைத்தவைகளை என்னால்
உங்களிடம் சொல்லிப் பகிர்ந்து கொள்வதை இனிமேலும் தள்ளிப்போட முடியாது.
என்னிடம் எந்த உயர்வு, தாழ்வுமனப்பான்மை, பயம் என்பது கிடையாது.
“நான் எழுதுவதில் மிகவும் களைத்து விட்டேன்” இதுபோன்ற எழுத்துக்கள் நன்றாக வேலை செய்கின்றன.
இவை பழைய முறைகளாக உங்களுக்குத் தோணலாம்.
உங்களுக்கு யாருமே தாந்திராத ஒரு மர்ம மகிழ்ச்சி ஒன்று என்னால் தர முடியும்.
அது தனித்தன்மை வாய்ந்த ஒன்று.
நான் ஒருவகை எழுத்துக் கலையை வளர்த்துக் கொண்டேன்.நன்கு பயிற்றுவித்துக் கொண்டேன். அதன் மூலமாக.
யாருக்கும் எந்த மன்னிப்பும் கிடையாது என்பது என் கொள்கை.
நல்லெண்ணம், பொறுப்பற்ற தன்மை, கஷ்டமான சூழ்நிலைகளை நான் ஒப்புக்கொள்வதில்லை. என்னைப் பொறுத்தவரை குற்றங்கள் விடுவிப்பதும் இல்லை, ஆசீர்வதிப்பதும் இல்லை. செயலால் செயல் எல்லாம் சேர்த்து மொத்தமாகப் பெரிய வடிவம் எடுக்கிறது.
நான் உலகில் மற்றவர்கள் போல வாழ்வது நல்லது என்று கற்றிருக்கிறேன்.
அதற்கு மற்றவர்கள் என்னைப் போல வாழ்வது நல்லது என ஏன் கற்கவில்லை ?
நாம் எல்லோரும் ஏன் ஒரே மாதிரி இல்லை ?
தொடர்ந்து ஒரே கேள்விக்கு விடை தெரிந்தாலும்,
அதே விஷயத்தைப் பல கோணங்களில் விவாதிக்கிறோம்.
ஏன் ?
தயவு செய்து சொல்ல முடியுமா ?
உண்மையைச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்.
“அடிமைத்தனமின்றி எந்த தீர்வும் கிடையாது”
முன்பொரு காலத்தில் நான் சுதந்திரம் பற்றி மிக அதிகமாகப் பேசியவன்.
நாள் முழுவதும் பேசுவேன்.
நான் சொல்வதை எதிர்ப்போரை சுதந்திரம் என்ற வாள் வீசி பயமுறுத்துவேன்.
எனது இந்த வகைப் பேச்சால் என் ஆசைகளையும், அதிகாரத்தையும் பெருக்கியுள்ளேன்.
நான் செய்ததை நியாயப்படுத்த அதிகமாகப் பாடுபட்டுள்ளேன்.
இதற்கு விலையாக நான் பெற்றது, அன்பாகப் பேசும் நண்பர்கள் கிடையாது.
தனிமையில், தடுக்கப்பட்ட அறையில் தனியாக !
சுதந்திரம் ஒரு தாங்க முடியாத பளுவாக மாறிவிட்டது.
எனது ஒவ்வொரு அளவுக்கு மீறிய செயலும் எனது பலத்தைக் குறைத்துவிட்டது.
இது ஒரு நீண்ட துக்கம்.
இந்த துக்கத்தைப் போக்க ஒரே வழி உண்டு.
எஜமானர் இல்லாத ஒருவரின் நாட்கள் மிகக் கொடுமையானவை.
ஆகவே ஒருவர் ஒரு எஜமானரைக் கட்டாயமாக்த் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இது ஒரு வெட்கக்கேடு இல்லையா?
இந்த வெட்கம் என்னைத் தாக்குகிறது.
இதை ஒரு கெளரவத்தோடு செய்ய வேண்டும் என்ற உணர்வு உண்மையில் என்னை மேலும் தாக்குகிறது.
என்னிடம் இருப்பது நல்ல மனம் நிறைந்த சிரிப்பு, காந்தம் போலக் கவரும் ஒரு கைக்குலுக்கல்.
மனித வழி என்பது இது தான். இரு முகம் கொண்டவன், தன்னை நேசிக்காமல் அடுத்தவர்களை நேசிக்க முடியாது.
சுருக்கமாகச் சொல்லப்போனால் நான் மகிழ்ச்சியாக வாழத் தேவையான மிக முக்கியமான ஒன்று
மற்றவர்கள் வாழாமல் இருப்பதைத் தேர்ந்தெடுப்பது.
தவறு செய்திருந்தாலும் தண்டிக்கபட முடியாததாக அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை !
ஏனோ இப்பாடல் நினைவில் சிறகடித்துப் பறக்கிறது.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்கள் மனதில் நிற்பவர் யார் ?
மாபெரும் வீரர் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்.
1:47 மு.பகல் இல் மே 7, 2009 |