காகத்திற்கு குயில் போல பிறந்து வாழ வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அது இறைவனை தினமும் மறுபிறப்பு என்பது தனக்கு குயிலாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டது.
ஒரு நாள் காகம் இறந்துபோனது.
அதன் மறுபிறப்பு மறுபடியும் காகமாகவே அமைந்துவிட்டது.
கோபம் கொண்ட காகம் இறைவனை நோக்கிக் கேள்வி எழுப்பியது.
” எனக்கு ஏன் இப்படி? நான் எனது விருப்பத்தை உனக்கு தினமும் தெரிவிக்கவில்லையா?”
இறைவன் சொன்னார், ” வேப்பம்பழம் மீது ஆசை வைத்தால் காகமாகப் பிறக்கவேண்டியது தான்.” குயிலாகப் பிறக்கவேண்டும் என்றால் மாம்பழம் மீது ஆசை வைக்க வேண்டும். வேப்பம்பழம் கூடாது”
மேலும் சொன்னார், ” மலம் தின்னும் பன்றி யானையாகப் பிறக்க ஆசைப்பட்டால், கரும்பு தின்ன ஆசைப்பட வேண்டும்”