ஆண்டவன் கட்டளை

ஆறு மனமே ஆறு
இந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு

கட்டளைகள் 1 & 2.

கொடுக்கும் விலை
1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

கிடைக்கும் நிலை
உள்ளத்தில் உள்ளது அமைதி

உவமை
இதில் சொல்லுக்கு செய்கை பொன்னாகும்

கொடுக்கும் விலை
2. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

கிடைக்கும் நிலை
இறைவன் வகுத்த நியதி

உவமை
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

நன்மை (கட்டளைகள் 1 & 2.)
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

கட்டளைகள் 3 & 4.

கொடுக்கும் விலை
3. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

கிடைக்கும் நிலை
உலகம் உன்னிடம் மயங்கும்

உவமை
இதில் உண்மை என்பது அன்பாகும்

கொடுக்கும் விலை
4. நிலை உயரும் போது பணிவு கொண்டால்

கிடைக்கும் நிலை
உயிர்கள் உன்னை வணங்கும்

உவமை
பெரும் பணிவு என்பது பண்பாகும்

நன்மை (கட்டளைகள் 3 & 4.)
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

கட்டளைகள் 5 & 6.
கொடுக்கும் விலை
5. ஆசை கோபம் களவு கொண்டவன்

கிடைக்கும் நிலை
பேசத் தெரிந்த மிருகம்

உவமை
இதில் மிருகம் என்பது கள்ள மனம்

கொடுக்கும் விலை
6. அன்பு நன்றி கருணை கொண்டவன்

கிடைக்கும் நிலை
மனித வடிவில் தெய்வம்

உவமை
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

நன்மை (கட்டளைகள் 5 & 6.)
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

மறுமொழி இடுக