மானம்

மே 19, 2007

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் கோச்செங்கணான் என்ற சோழ மன்னனிடம் போரில் சிறைப்பட்டு குடவாயில் என்னும் ஊரில் சிறை வைக்கப்பட்டான். சிறையில் அவனுக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது. தண்ணீர் கேட்டான். காவலன் சற்றே காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்து தந்தான்.

கொண்டு வந்து தந்த தண்ணீரைக் குடிக்காமல் உயிர்விட்டான் அந்த மன்னன்.
மனம் பொறுக்காத மன்னன் இறக்கும்போது ஒரு பாடல் எழுதிவைத்துவிட்டு மாண்டான்.

அவன் எழுதிய பாடல்

“குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆளன்று என்று வாளில் தப்பார்”

பொருள்:
குழந்தை இறந்து பிறந்தாலும், உருவம் இல்லாமல் சதைப் பிண்டமாக பிறந்தாலும் வாளால் கீறியே அதைப் புதைப்பார்கள். நான் போரில் சாகாமல், சிறையில் இருப்பதால் சிறைக்காவலன் கூட என்னை மதிக்கவில்லை என்பது சொல்லாத பொருள்.


ஆண்டவன் கட்டளை

மே 19, 2007

ஆறு மனமே ஆறு
இந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்குத் தெய்வத்தின் கட்டளை ஆறு

கட்டளைகள் 1 & 2.

கொடுக்கும் விலை
1. ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

கிடைக்கும் நிலை
உள்ளத்தில் உள்ளது அமைதி

உவமை
இதில் சொல்லுக்கு செய்கை பொன்னாகும்

கொடுக்கும் விலை
2. இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்

கிடைக்கும் நிலை
இறைவன் வகுத்த நியதி

உவமை
வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

நன்மை (கட்டளைகள் 1 & 2.)
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

கட்டளைகள் 3 & 4.

கொடுக்கும் விலை
3. உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்

கிடைக்கும் நிலை
உலகம் உன்னிடம் மயங்கும்

உவமை
இதில் உண்மை என்பது அன்பாகும்

கொடுக்கும் விலை
4. நிலை உயரும் போது பணிவு கொண்டால்

கிடைக்கும் நிலை
உயிர்கள் உன்னை வணங்கும்

உவமை
பெரும் பணிவு என்பது பண்பாகும்

நன்மை (கட்டளைகள் 3 & 4.)
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்

கட்டளைகள் 5 & 6.
கொடுக்கும் விலை
5. ஆசை கோபம் களவு கொண்டவன்

கிடைக்கும் நிலை
பேசத் தெரிந்த மிருகம்

உவமை
இதில் மிருகம் என்பது கள்ள மனம்

கொடுக்கும் விலை
6. அன்பு நன்றி கருணை கொண்டவன்

கிடைக்கும் நிலை
மனித வடிவில் தெய்வம்

உவமை
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

நன்மை (கட்டளைகள் 5 & 6.)
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்


மறதி

மே 19, 2007

மறதியால் இன்று அலைச்சல் ஏற்பட்டது.
என் மறதிக்கு எனக்குத் தெரிந்த காரணங்கள்.

1. அலட்சியம்
2. வேலைச் சுமை
3. கவலை
4. திட்டமிடாமை.

பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் ஒன்று வெளியூர் பயணம் செய்வோர் மனப்பாடம் செய்து கொண்டு பயனடைவதாக உள்ளது.

சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்பு பாட்டரி விளக்குத் தூக்கு கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செறுப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டப் பெட்டி ரூபாய் கைகொள்க யாத்திரைக்கே

இன்று பயணம் செய்வோர் எடுத்துச் செல்லும் பொருள் இதில் எவ்வளவு என்பது பாத்தால் அவை மிகவும் குறைவாக, பலது இல்லாமல், வேறு பொருள்கள் அந்த இடத்தில் இடம் மாறியுள்ளது எனக்கு வியப்பு.

இன்று பயணம் செய்வோர் பயணிக்க ஈ-டிக்கெட் மற்றும் அதன் அத்தாட்சி, செல்போன் சார்ஜர், க்ரெடிட்/டெபிட் கார்டு என்று பல புதியதாக இன்று இடம் பெற்றுவிட்டன.

பாட்டரி விளக்கு, தூக்கு கூஜா, தாள் பென்சில் தீப்பெட்டி கோவணம் (?!) முதலியவை பயணத்துக்குத் தேவையா என்ன ?


பிறர்க்கு உதவுவது

மே 19, 2007

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வகையான துன்பம்.
மகனை இழந்த பெரும் சோகம்.
பணத்தை இழந்த பெரும் துன்பம்.
மனைவியை இழந்து விட்ட துன்பம்.
கணவனை இழந்த துயரம்.
தாய் தந்தையை இழந்த அனாதையின் உள்ளம்.
பெரிய விபத்தில் எல்லோரையும் இழந்த பெண் ஒருவளின் துயரம்.

இன்னும் பல வாழ்க்கையில் இருந்தாலும் வாழ்க்கையை வாழ வேண்டிய யதார்த்தம்.
என்ன செய்வது? எப்படி வாழ்வது என்று சிந்திக்கும் போது துன்பப்பட்டவரின் உள்ளத்தில் தோன்றும் ஒளிக்கீற்று தான் “பிறர்க்கு உதவுவது”.

அதுவரை இந்த சொற்றொடரின் பொருள் யாருக்கும் விளங்காது.

வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக மாற்றும் சக்தி இந்த செயலுக்கு மட்டுமே உண்டு.


வினா விடை

மே 19, 2007

வினாவும் விடையும்.

கே.பி.சுந்தராம்பாளின் கணவர் எஸ்.ஜி.கிட்டப்பா (நடிகர் மற்றும் பாடகர்) ஒரு முறை நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வேண்டிய நிலை. எதிர் வக்கீல் கிட்டப்பாவிடம் குறுக்கு விசாரணையில் கேட்ட கேள்விகளும், கிட்டப்பாவின் பதிலும்.

“நீங்க என்ன தொழில் செய்கிறீர்கள்?”

“நாடகங்களில் நடித்து வருகிறேன்”

“கூத்தாடும் கேவலமான பிழைப்பா?”

“ஆமாம். ஆனா எங்க அப்பா செஞ்ச தொழிலுக்கு இது தேவலை.”

அவர் என்ன செஞ்சார்?”

:வேணாம், அதச் சொல்ல முடியாது. அது கேவலத்திலும் கேவலமான தொழில்.

பரவாயில்ல. அது என்னனு சொல்லுங்க.

வக்கீல் தொழில் செஞ்சாரு.

***
பழைய மாணவர் ஒருவர் தம் ஆசிரியரைச் சந்தித்தார்.

மாணவர், ‘ஐயா, நான் உங்ககிட்டப் படிச்சிருக்கேன், எனக்குத் தமிழ் வாத்தியார் நீங்க தான்” என்றார்.

ஆசிரியர், ”ழ வராம அடிக்கடி என் கிட்ட உதை வாங்குவியே, அந்தப் பையன் தான் நீ?”

மாணவர், ‘ஆமாம், இப்ப நல்லா ழ வருது. நீங்க முந்தியெல்லாம் பசங்களக் கூப்பிட்டு வீட்டு வேலையெல்லாம் வாங்குவீங்களே, இப்பவும் அப்படித்தானா?”

*****=
அம்மா, படித்துக் கொண்டிருக்கும் மகனிடம் “டேய், கடைக்குபோய் வெண்டைக்காய், தக்காளி வாங்கிட்டுவாடா சமையலுக்கு”
அப்பா, ” என்ன ஐயேயெஸ்ஸுக்கா படிக்கிற? போய் வாங்கிட்டு வந்து படியேண்டா?”
மகன், ” நீங்க என்ன பேப்பர் படிச்சுட்டு சட்டசபையில போய் பதில் சொல்லவா போறிங்க?”


நாளை வரும் என்று நம்பலாமா ?

மே 19, 2007

சுதா ரகுநாதன் பாடிய மானசப் பொய்கையிலே … என்ற தொகுப்பில் உள்ள நாளை வரும் என்று நம்பலாமா ?
என்ற பாடலைக் கேட்டவர்கள் யாராவது உண்டா ?. இப்பாடலைக் கேட்ட உடன் என் மனம் அடைந்த உணர்வுகளை வார்த்தையில் எழுத முடியாது என்று தோன்றினாலும், இது ஒரு பகிர முடியாத உன்னத அனுபவம் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். பொதுவாகவே முருகன் பாடல்கள் என்பது மனதை உலுக்கி விடும் இயல்பாக அமைவது எனக்கு ஒரு வியப்பு. உதாரணமாக, பல பாடல்கள் என்னால் சொல்ல முடியும்.

என் அவதானிப்பு இப்படியாக

1. பாதிமதினதி – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)

2. பக்தியால் யான் உனைப் பல காலம் – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு (லைவ் கான்ஸர்ட் வால்யூம் -4)

3. குறிஞ்சி நிலத் தெய்வம் முருகனே – கே.ஜே .ஜேசுதாஸ் பாடியது – தரங்கிணி வெளியீடு ( முருகன் பாடல்கள்)

இப்பாடல்கள் எழுதியவர், பாடியவர், ராகம், பின்ணணி இசை, ஒலிப்பதிவு என்று பல அம்சங்கள் சேர்ந்த ஒன்று.

கந்த சஷ்டிக் கவசம் பாடலின் உக்கிரகம் அதைக் கேட்டவர்களுக்கு நன்கு தெரியும். ( நான் கேட்டது சூலமங்கம் சகோதரிகள் பாடியது)

அதே வரிசையில் சண்முக கவசமும் நான் பல முறை (சஷ்டி கவசத்தை விட) திரும்பத் திரும்பக் கேட்கும் ஒரு ஒரு ஒலி வடிவம். ( சீர்காழி கோவிந்த ராஜன் பாடியது)

இப்படியாகச் சில பாடல்கள் மூலம் நான் முருகன் பாடல்கள் பற்றிய ஒரு அபிப்பிராயமும், விருப்பமும் கொண்டிருந்தேன்.

சுதா ரகுநாதன் பாடிய பாடலினை எழுத்து வடிவில் இங்கு பதிந்துள்ளேன். இப்பாடலில் வரும் “மனமுருகி” என்ற சொற்பிரயோகம் சுதா ரகுநாதனால் பல விதங்களில் ஏற்ற இறக்கத்துடன் பாடப்பட்டது கேட்பவர் மனம் உருகிவிடும் சக்தி படைத்தது.

நாளை வரும் என்று நம்பலாமா ? (2)
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?

நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?

நாளை வரும் என்று நம்பலாமா ?

வேலைப் பிடித்தக் கந்தவேளை மனமுருகி(4)
காலை மாலை இரு வேளையும் துதிக்காமல்(2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?

அழகான வாலிபம் அணங்குடனே தீரும் (2)
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும் (2)
அழகான வாலிபம் அணங்குடனே தீரும்
திரண்டுவரும் நேரம் கவலை பல சூழும்

திருமுருகன் நாமம்
நாமம்
திருமுருகன் நாமம் நினைக்க நேரமில்லை (2)
மறுபிறவி என்பது எங்கோ தெரியவில்லை (2)
நாளை வரும் என்று நம்பலாமா ?
குகன் தாளைப் பணிந்தருள் பெற வேண்டாமா?
நாளை வரும் என்று நம்பலாமா ?

நம்பலாமா ? நம்பலாமா ?

இப்பாடல் தொகுப்பில் உள்ள மற்ற பாடல்களில் வேறு சில பாடல்களும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத தன்மையுடைய சிறப்புடையவை.

1. அபிராமி அந்தாதியின் தனம் தரும் கல்வி வரும் எனத் துவங்கும் ஒரு அம்மன் பாடல்
2. மானசப் பொய்கையிலே
3. நாதர் முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே

CD Cover