மே 13, 2007
ஓர் ஊரில் ஒரு வீட்டில் ஒரு கூண்டுக் கிளிக்குத் தினமும் உண்ண மிளகு கொடுத்து வந்தார்கள். அந்தக் கூண்டுக்கிளி காரமான மிளகைச் சகித்தபடி உண்டு வந்தது. ஒரு நாள் ஒரு வழிப்போக்கன் அக்கிளி மிளகு உண்பதைக் கண்டு வருந்தி, அதற்கு ஒரு கருப்பு திராட்சையை உண்ணக் கொடுத்தான்.
கிளி அப்பழத்தின் சுவையில் மயங்கி, அவனிடம் ” இது என்ன பெரிய மிளகு, தித்திப்பாக இருக்கே?” என்று வினவியது.
அதற்கு அவன், இதைவிடத் தித்திப்பான ஒன்று உண்டு. அது உனக்கு நினைவில் இல்லை. இப்போது பார் அந்த தித்திப்பின் சுவையை என்று கூறியபடியே அக்கிளியின் கூண்டுக்கதவினைத் திறந்து அக்கிளியை வெளியே பறக்க விட்டான்.
போன மாதம் பொதிகையில் காட்டப்பட்ட ஆதிசங்கரர் திரைப்படத்தில் வந்த ஒரு காட்சி.
Leave a Comment » |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
மே 13, 2007
ஒரு நத்தை மெள்ள நடந்து வந்து கொண்டிருந்தது. அது வரும் பாதையில் ஒரு பெரிய காளான் குடை இருந்தது. அப்போது மழை பெய்ய ஆரம்பித்து விட்டது. நத்தை மழைக்கு அந்த காளான் குடைக்கு கீழே வந்து ஒதுங்கியது.
அதன் உடல் காளான் குடை மேல் உரசியது. மேலும், நத்தையின் எச்சில் காளான் குடை மேல் பட்டு விட்டது. காளான் குடை, மெல்லத் தன் தொண்டையை செருமியபடி, நத்தையே நீ உன் ஓட்டுக்குள்ளேயே ஒதுங்கியிருக்கலாமே, எனக்கு இடைஞ்சலாக இங்கே ஏன் ? எனக் கேட்டது.
நத்தை அதற்கு ஆமாம் இருக்கலாம் தான் என்று பதில் சொல்லிகொண்டிருக்கும் போதே இன்னொரு நத்தை அந்தப் பக்கமாக வந்தது, மேலும் அது பேசிக்கொண்டிருக்கும் இந்த நத்தையைப் பார்த்து விட்டு அதுவும் காளான் குடைக்குக் கீழே வந்து ஒதுங்கிக் கொண்டது. அப்போது இரண்டு நத்தைகளுக்கும் அந்த இடம் போதவில்லை. இரண்டும் ஒன்றை ஒன்று தள்ளியபடியே இருக்க, அப்போராட்டத்தில் காளான் குடை உடைந்து, சரிந்து கீழே விழுந்து விட்டது.
அப்போது ஒரு நத்தை இன்னொரு நத்தையிடம் சொன்னது, ” நாம இனிமே . . . “
இந்தக் கதை பிரேம்-ரமேஷ் எழுதிய பரதேசி என்ற நாவலிலிருந்து.
Leave a Comment » |
கதை |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
மே 13, 2007
பாரத்வாஜ முனிவரின் மகன் துரோணரின் மனைவிக்குத் தன் குழந்தையின் (அஸ்வத்தாமன் ?) பசியை அடைக்க வழி தெரியவில்லை. அப்பெண்மணி. அரிசி மாவை தண்ணீரில் கரைத்துப் பால் என்னும் தோற்றம் ஏற்படுத்தி குழந்தைக்குக் கொடுத்தாள்.
இக்கபடமான வாழ்க்கை துரோணருக்கு அதிர்ச்சியளித்தது. அவரிடம் பணம் சம்பாதிக்க எந்த திறமையும் அப்போது இல்லை. பிழைக்க வழி தெரியாமல் அவதிப்பட்ட அக்காலத்தில், பரசுராமர் (ரேணுகா மற்றும் ஜமதக்னி முனிவரின் மகன், திருமால் அவதாரம்) தானங்கள் செய்யும் நாள் என்று ஒரு நாள் உண்டு என்பது துரோணருக்குத் தெரியவந்தது.
அந்நாளில் துரோணர், பரசுராமரைத் தேடிச் சென்ற காலம், தானங்கள் எல்லாம் முடிந்து ஒன்றுமே இல்லாத காலம்.
பரசுராமர் அப்போது கொடுக்கத் தன்னிடம் பொருள் ஏதும் இல்லை என்று கைவிரித்து விட்டார்.
துரோணர் அதற்கு, ” சொர்க்க வாசலில் கதவு திறக்கும். உள்ளே போகலாம் என்று ஆயிரம் ஆண்டுகள் கண்விழித்தபடியே தவம் இருந்த ஒருவன், கடைசி நாள் அயர்ச்சியில் ஒரு விநாடி கண் மூடி திறந்த காலத்தில் கதவு திறந்து, பின் உடனே மூடிக்கொண்டால், அவனது மனநிலை எப்படி இருக்கும் ? அந்த மனநிலையில் நான் இப்போது இருக்கிறேன்.” என்றார்.
இந்த பதிலால் மனவெழுச்சி அடைந்த பரசுராமர், தன்னிடம் கொடுக்க தனது போர்த் திறமை மட்டுமே உண்டு எனவும், அதைத் துரோணருக்குத் தானமாகக் கற்பித்தார்.
அந்த தானத்தின் பயனால் துரோணர் அடைந்த பதவி தான் மகாபாரதத்தில் குரு பதவி.
அப்பதவியில், அவர் மரணம், அஸ்வத்தாமன் இறந்தான் என்ற கபடமான நிகழ்ச்சியால்.
தன் மகனின் பசி மற்றும் கபட வாழ்க்கை
இவற்றிலிருந்து வெளிவந்த துரோணரின் மரணம்
தன் மகனின் மரணம் என்ற ஒரு கபட நிகழ்ச்சியால்.
Leave a Comment » |
பசி |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
மே 13, 2007
என்ன தெரியும் அவளுக்கு ?
என நான் ஒதுங்கிய காலத்தில்
தருக்க நியாயத்தை பொய்யாக்கி
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.
நாம் வாழ்வில்
நெருங்காத காலத்தில்
முகமறியா ஞாநி போல
என் கண்ணீரைத் துடைத்தபடி
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.
அமைதியும் இரவும்
கலந்த குளிரில்
புரியாத முகபாவத்தில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும்போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்
என் முகம்பார்த்து கரங்களைப் பற்றி
மழைச்சாரல்
என் முகத்தில் வீசியதுபோல
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்
லேசான புகையும்,
அடர்ந்த நறுமணமும்
சூழ்ந்த இரவில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.
வாயோரத்தில் ஒட்டிய
புன்னைகையுடன்
உறக்க மயக்கத்தில்
நீ சொன்ன ஒன்றை
நான் உனக்கு நினைவுகூறும் போது
பரவசநிலை உன்னை விழுங்கட்டும்.
Leave a Comment » |
காதல் |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.
மே 13, 2007
காற்றின் மூச்சு எங்கள் மீது படர்ந்து பரவிய
ஏரியில் சூரியஸ்தமனம் கசிந்து பரவிய
வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப் பறந்து பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்
பனியின் அடர்த்தியில் நிழலுருவங்கள் மறைந்து பரவிய
சோம்பேறித் தவளைகள் தாவி குதிக்கும் நீரலைகள் பரவிய
மந்தமான இலையுதிகாலச் சிறகுகள் அலைந்து பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்
திடீரெனெ எனைத் தேடும் பால்யகால நினைவுகள் பரவிய
என் இதயத்தில் பெருக்கெடுக்கும் கனவுகள் பரவிய
ஆணாக இருப்பதின் களைப்பு பரவிய
இக்காலம் மறைவிடங்களின் உச்சகட்டம்
அவள் தன் காயங்களை வெற்றியின் அடையாளங்களாக
என்னிடம் காட்டும் இக்காலம் இனிமையானது
இது வார்த்தைகளிலேயே சிறந்த மொழிபெயர்ப்பு
Leave a Comment » |
காதல் |
நிரந்தர பந்தம்
RAM பதிப்பித்தது.