இங்கே எனக்குப் பிடித்தமான கவிதைகளைத் தொகுக்க உள்ளேன்
மனிதர்கள் -
பணம் குவிக்கக் கடன்படுகிறர்கள்
புகழ் ஈட்ட நாணம் இழக்கிறார்கள்
அதிகாரம் பெற அடிமைகள் ஆகிறார்கள்
உலகை வெல்ல உலகை அழிக்கிறார்கள்
உயிர் வாழ உயிரை விடுகிறார்கள்
- ராஜ் கெளதமன்
====================================================
ஆண்
பெண்
வெறித்தனம்
எல்லாம்
ஆன்மீகத்தில்
அடங்கிவிடும்.
-சுவாமி ஓங்காரநந்தா.
===========================================================
வயிறு பசித்தால்
வாயால் கேட்டிருவேன் – எந்தன்
கண்ணின் பசியால்
கதறினேனே நாள்முழுதும்.
- நாட்டுப்புறக் காதல் திருமணப் பாடல்
===========================================================
எப்பவாவது ஒரு
கொக்கு பறக்கும்
நகருக்கு மேலே என்
கவசமும் வாலும் நீளும்
உருகி ஓடும்
ஊருக்கு வெளியே
-தேவதச்சன்
===========================================================